நியூயார்க்: இந்தியாவை பூர்வீமாகக் கொண்ட மிகப் பெரிய கோடீஸ்வர தம்பதி, தங்களது மகளுடன் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மாசசூசட்ஸ் மாகாணத்தில் அவர்கள் வசித்து வந்து 50 லட்சம் டாலர் மதிப்பிலான சொகுச வீட்டிலிருந்து 3 பேரின் பிணங்களும் மீட்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறந்தவர்கள் விவரம் - ராகேஷ் கமல் (57), மனைவி டீனா (54), மகள் ஏரியானா (18). டோவர் பகுதியில் இவர்களது வீடு உள்ளது. மாசசூசட்ஸ் தலைநகர் போஸ்டன் நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்த டோவர் நகரம் உள்ளது. ராகேஷ் கமல் உடலுக்கு அருகில் துப்பாக்கி இருந்ததை போலீஸார் கண்டறிந்து மீட்டுள்ளனர். 3 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மனைவி, மகளைக் கொன்று விட்டு ராகேஷ் தற்கொலை செய்து கொண்டாரா என்றும் தெரியவில்லை. இருப்பினும் இதுவரை 3 பேரும் என்ன மாதிரியான சம்பவத்தால் உயிரிழந்தனர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.
எடுநோவா என்ற நிறுவனத்தை முன்பு டீனாவும், அவரது கணவரும் இணைந்து நடத்தி வந்தனர். இப்போது அதை மூடி விட்டனர். சமீப காலமாக நிதிப் பிரச்சினையில் ராகேஷ் கமலும், டீனாவும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இவர்களது மரணச் சம்பவம் நடந்துள்ளது.
பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!
வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
{{comments.comment}}