நியூயார்க்: இந்தியாவை பூர்வீமாகக் கொண்ட மிகப் பெரிய கோடீஸ்வர தம்பதி, தங்களது மகளுடன் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மாசசூசட்ஸ் மாகாணத்தில் அவர்கள் வசித்து வந்து 50 லட்சம் டாலர் மதிப்பிலான சொகுச வீட்டிலிருந்து 3 பேரின் பிணங்களும் மீட்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறந்தவர்கள் விவரம் - ராகேஷ் கமல் (57), மனைவி டீனா (54), மகள் ஏரியானா (18). டோவர் பகுதியில் இவர்களது வீடு உள்ளது. மாசசூசட்ஸ் தலைநகர் போஸ்டன் நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்த டோவர் நகரம் உள்ளது. ராகேஷ் கமல் உடலுக்கு அருகில் துப்பாக்கி இருந்ததை போலீஸார் கண்டறிந்து மீட்டுள்ளனர். 3 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மனைவி, மகளைக் கொன்று விட்டு ராகேஷ் தற்கொலை செய்து கொண்டாரா என்றும் தெரியவில்லை. இருப்பினும் இதுவரை 3 பேரும் என்ன மாதிரியான சம்பவத்தால் உயிரிழந்தனர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.
எடுநோவா என்ற நிறுவனத்தை முன்பு டீனாவும், அவரது கணவரும் இணைந்து நடத்தி வந்தனர். இப்போது அதை மூடி விட்டனர். சமீப காலமாக நிதிப் பிரச்சினையில் ராகேஷ் கமலும், டீனாவும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இவர்களது மரணச் சம்பவம் நடந்துள்ளது.
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}