டெல்லி: டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இன்று காலை டெல்லி வந்து சேர்ந்து இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இன்று காலை இந்திய அணி தாயகம் திரும்பியது. சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்பிய இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் மவுரியாவுக்குச் சென்று தங்கினர். அங்கு கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சென்று கிரிக்கெட் அணியினர் சந்தித்தனர். பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் பிரதமரைச் சந்தித்த அவரது வாழ்த்துக்களை பெற்றனர். அவர்களை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்துக் கெளரவித்தார். பின்னர் அவர்களுடன் அவர் உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மும்பை சென்று பி சி சி ஐ ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அப்போது மும்பையில் இந்திய அணி வீரர்கள் T20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தில் செல்ல உள்ளனர். மும்பை வாங்கடே மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெறவுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}