நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனேயே இருக்கும்.. கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்

Dec 09, 2024,03:40 PM IST

போபால்: நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.


கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் களம் இறக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.23.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். 2021ல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 320 ரன்கள் குவித்து அணி இறுதிப்போட்டி வர முக்கிய பங்காற்றியவர்.




இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நான் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்ததால், கிரிக்கெட் மட்டுமே விளையாடுவேன் எனக் கூறி எனது பெற்றோர்களை சமாளிப்பது கடினம். எனது பெற்றோர்கள் நான் விளையாட்டிலும் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பினார்கள். புதிதாக எந்த வீரர்கள் வந்தாலும், நீங்கள் படிக்கிறீர்களா என்று தான் கேட்பேன். என்னால் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்கள் செய்ய முடியும் என்பதால் செய்கிறேன்.


கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் அறிவு மட்டும் இன்றி. பொது அறிவையும் கற்க வேண்டும். உங்களால் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டபடிப்பை முடிக்க முடிந்தால், நீங்கள் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும். நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவு தான் களத்தில் கூட நான் சரியான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகிறது.நான் தற்போது முனைவர் பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை அடுத்த முறை நேர்காணல் செய்யும் போது நான் டாக்டர் வெங்கடேஷ் ஆக இருப்பேன் என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்