போபால்: நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் களம் இறக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.23.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். 2021ல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 320 ரன்கள் குவித்து அணி இறுதிப்போட்டி வர முக்கிய பங்காற்றியவர்.
இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நான் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்ததால், கிரிக்கெட் மட்டுமே விளையாடுவேன் எனக் கூறி எனது பெற்றோர்களை சமாளிப்பது கடினம். எனது பெற்றோர்கள் நான் விளையாட்டிலும் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பினார்கள். புதிதாக எந்த வீரர்கள் வந்தாலும், நீங்கள் படிக்கிறீர்களா என்று தான் கேட்பேன். என்னால் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்கள் செய்ய முடியும் என்பதால் செய்கிறேன்.
கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் அறிவு மட்டும் இன்றி. பொது அறிவையும் கற்க வேண்டும். உங்களால் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டபடிப்பை முடிக்க முடிந்தால், நீங்கள் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும். நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவு தான் களத்தில் கூட நான் சரியான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகிறது.நான் தற்போது முனைவர் பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை அடுத்த முறை நேர்காணல் செய்யும் போது நான் டாக்டர் வெங்கடேஷ் ஆக இருப்பேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}