பாரீஸ்: பாரீஸில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் மகளிர் மற்றும் ஆடவர் வில்வித்தை அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
நேரடியாக இரு அணிகளும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. அரை இறுதிக்குள் நுழைந்தால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகி விடும்.
தீரஜ் பொம்மதேவா, தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர். சுற்றுப் போட்டிகளில் ஆடவர் அணி 3வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றது. மகளிர் அணி 4வது இடம் பெற்றது. தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணி நேரடியாக காலிறுதிக்குப் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 5 முதல் 12வது இடம் வரை பெறும் அணிகளுக்கு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதும். இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகளைப் பொறுத்தவரை இன்னும் 2 வெற்றிகள் கிடைத்தால் பதக்கம் உறுதியாகி விடும்.
ஆடவர் அணியில் இடம் பெற்றுள்ள தீரஜுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். உலகக் கோப்பை போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார்.
இந்திய மகளிர் அணியைப் பொறுத்தவரை அங்கிதாவுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். மற்ற வீராங்கனைகளான தீபிகா குமாரி மற்றும் பஜன் கெளர் ஆகியோரும் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 4வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா காலிறுதியில் வென்றால், அரை இறுதிப் பொட்டியில் கொரியாவை சந்திக்க வேண்டியிருக்கும். கொரியா வலுவான அணி என்பதால் இந்த சுற்று சற்று சவால்தான்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}