பாரீஸ்: பாரீஸில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் மகளிர் மற்றும் ஆடவர் வில்வித்தை அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
நேரடியாக இரு அணிகளும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. அரை இறுதிக்குள் நுழைந்தால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகி விடும்.

தீரஜ் பொம்மதேவா, தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர். சுற்றுப் போட்டிகளில் ஆடவர் அணி 3வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றது. மகளிர் அணி 4வது இடம் பெற்றது. தகுதிச் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணி நேரடியாக காலிறுதிக்குப் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 5 முதல் 12வது இடம் வரை பெறும் அணிகளுக்கு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதும். இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகளைப் பொறுத்தவரை இன்னும் 2 வெற்றிகள் கிடைத்தால் பதக்கம் உறுதியாகி விடும்.
ஆடவர் அணியில் இடம் பெற்றுள்ள தீரஜுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். உலகக் கோப்பை போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார்.

இந்திய மகளிர் அணியைப் பொறுத்தவரை அங்கிதாவுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். மற்ற வீராங்கனைகளான தீபிகா குமாரி மற்றும் பஜன் கெளர் ஆகியோரும் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 4வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா காலிறுதியில் வென்றால், அரை இறுதிப் பொட்டியில் கொரியாவை சந்திக்க வேண்டியிருக்கும். கொரியா வலுவான அணி என்பதால் இந்த சுற்று சற்று சவால்தான்.
பங்குனி மாத சிவராத்திரி வெகு விசேஷமானது.. எப்படி தெரியுமா?
நவராத்திரி.. எத்தனை வகை இருக்கு பாருங்க.. அதுல இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா?
தெரியுமா...?
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை
தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை
{{comments.comment}}