டெல்லி: அமெரிக்கா இந்திய ஏற்றுமதிக்கு 50% வரி விதித்ததால், ரூ.87,000 கோடி மதிப்புள்ள இந்திய ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
பல ஏற்றுமதியாளர்கள் வியட்நாம், இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுகின்றனர். ஏனெனில், அங்கு வரி குறைவாக உள்ளது. Pearl Global Industries நிறுவனம், அமெரிக்காவிற்கான உற்பத்தியை வெளிநாடுகளுக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. அதாவது இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள வரியால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய, ஏற்றுமதியாளர்கள் சந்தைகளை விரிவுபடுத்தவும், புதிய கூட்டணிகளை உருவாக்கவும் உற்பத்தியாளர்கள் யோசித்து வருகின்றனர். இதனால் இந்தியத் தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பல மாற்றங்கள், பாதிப்புகள் வரும் நாட்களில் ஏற்படும் என்று தெரிகிறது.

அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் கூட இந்தியத் தொழில்துறையில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை, குறையவில்லை. வழக்கம் போல நடந்து வருகிறது.. வேறு நாடுகள் மூலம் ஏற்றுமதியைத் தொடர நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதால் உற்பத்தி குறைவில்லாமல் தொடர்கிறது.
இந்தியாவிடம் மிகப் பெரிய உற்பத்தி திறன், திறமையான தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளதால், அமெரிக்காவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும், மீண்டும் அமெரிக்க சந்தையில் இந்தியா தனது இழந்த இடத்தைப் பெறும் என்றும் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்
வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி
ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு
ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்
தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?
திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்
துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை
{{comments.comment}}