- கலைவாணி கோபால்
டெல்லி: இண்டிகோ நிறுவனம் கடந்த ஒரு வாரமாக பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஒரு வார கால விமானப் பயண ரத்துக்கு ஈடு செய்யும் வகையில் பயணிகளின் கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தரவும் இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக ஏற்பட்ட இன்டிகோ விமான சேவை நிறுத்தம் அனைவரும் அறிந்ததே. இன்று ஏழாவது நாளாவதாக இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் 70க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதனால் விமான பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இண்டிகோ நிறுவனத்தின் இந்த போக்கால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், விமான பயணிகள் டிக்கெட்டை முன் பதிவு செய்த அனைத்து பணமும் அதாவது முழு தொகையும் இண்டிகோ நிறுவனம் திருப்பி தருவதாக உறுதி அளித்து உள்ளது. மேலும் நாளை மறுநாள் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது..

விமான சேவை நிறுத்தப்பட்டதற்கு காரணமான, விமான நேர அட்டவணையை ஒழுங்குபடுத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் அளித்துள்ளது..
இன்று ஹைதராபாத் - பெங்களூர் இடையான 150 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்தது விமான விமான பயணிகளிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}