- கலைவாணி கோபால்
டெல்லி: இண்டிகோ நிறுவனம் கடந்த ஒரு வாரமாக பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஒரு வார கால விமானப் பயண ரத்துக்கு ஈடு செய்யும் வகையில் பயணிகளின் கட்டணத்தை முழுமையாகத் திருப்பித் தரவும் இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக ஏற்பட்ட இன்டிகோ விமான சேவை நிறுத்தம் அனைவரும் அறிந்ததே. இன்று ஏழாவது நாளாவதாக இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் 70க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதனால் விமான பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இண்டிகோ நிறுவனத்தின் இந்த போக்கால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், விமான பயணிகள் டிக்கெட்டை முன் பதிவு செய்த அனைத்து பணமும் அதாவது முழு தொகையும் இண்டிகோ நிறுவனம் திருப்பி தருவதாக உறுதி அளித்து உள்ளது. மேலும் நாளை மறுநாள் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது..

விமான சேவை நிறுத்தப்பட்டதற்கு காரணமான, விமான நேர அட்டவணையை ஒழுங்குபடுத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் அளித்துள்ளது..
இன்று ஹைதராபாத் - பெங்களூர் இடையான 150 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்தது விமான விமான பயணிகளிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}