இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொலை சாதாரண விபத்துதான்.. உத்தரகாண்ட் அமைச்சர்

Feb 01, 2023,04:22 PM IST
டேராடூன்: உயிர்த்தியாகம் செய்வது என்பது காந்தி குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மரணங்கள் சாதாரண விபத்துதான் என்று கூறியுள்ளார் உத்தரகாண்ட்  அமைச்சர் கணேஷ் ஜோஷி.



டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார் அமைச்சர் ஜோஷி. அவர் மேலும் கூறுகையில், நான் ராகுல் காந்தியின் அறிவைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.  உயிர்த்தியாகம் என்பது அவர்களது குடும்பத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. சுதந்திரப் போராட்டத்தின்போது பகத்சிங், வீர் சவர்க்கர், சந்திர சேகர் ஆசாத் போன்றோரின் உயிர்த்தியாகத்தை நாடு பார்த்தது. அதுதான் உயிர்த்தியாகம். 
காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மரணங்கள் சாதாரண விபத்து. 

உயிர்த் தியாகத்திற்கும், விபத்துக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் புரியாமல் பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. காரணம், அவர்களது அறிவு அவ்வளவுதான். அதற்கேற்பத்தானே அவர்களால் பேச முடியும்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றிகரமாக முடிய பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம். இதற்காக நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.  ஆர்ட்டிகிள் 370 ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், ஜம்மு காஷ்மீரிலிருந்து ராகுல் காந்தி பத்திரமாக திரும்பியிருக்க முடியாது. லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியிருக்க முடியாது என்றார் கணேஷ் ஜோஷி.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்