இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொலை சாதாரண விபத்துதான்.. உத்தரகாண்ட் அமைச்சர்

Feb 01, 2023,04:22 PM IST
டேராடூன்: உயிர்த்தியாகம் செய்வது என்பது காந்தி குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மரணங்கள் சாதாரண விபத்துதான் என்று கூறியுள்ளார் உத்தரகாண்ட்  அமைச்சர் கணேஷ் ஜோஷி.



டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார் அமைச்சர் ஜோஷி. அவர் மேலும் கூறுகையில், நான் ராகுல் காந்தியின் அறிவைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.  உயிர்த்தியாகம் என்பது அவர்களது குடும்பத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. சுதந்திரப் போராட்டத்தின்போது பகத்சிங், வீர் சவர்க்கர், சந்திர சேகர் ஆசாத் போன்றோரின் உயிர்த்தியாகத்தை நாடு பார்த்தது. அதுதான் உயிர்த்தியாகம். 
காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மரணங்கள் சாதாரண விபத்து. 

உயிர்த் தியாகத்திற்கும், விபத்துக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் புரியாமல் பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. காரணம், அவர்களது அறிவு அவ்வளவுதான். அதற்கேற்பத்தானே அவர்களால் பேச முடியும்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றிகரமாக முடிய பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம். இதற்காக நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.  ஆர்ட்டிகிள் 370 ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், ஜம்மு காஷ்மீரிலிருந்து ராகுல் காந்தி பத்திரமாக திரும்பியிருக்க முடியாது. லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியிருக்க முடியாது என்றார் கணேஷ் ஜோஷி.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்