சென்னை: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது youtube இல் பத்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியுள்ள ஆல்பம்தான் இனிமேல். இந்தப் பாடல் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இப்பாடல் மூலம் முதன் முறையாக நடிகராக களமிறங்கியுள்ளார்.
முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ், திருமணம் என அனைத்தும் கலந்து 2கே கிட்ஸ்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த ஆல்பம் உள்ளது. அதை விட முக்கியமாக ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜின் கெமிஸ்ட்ரி, ரசிகர்களின் மனதை அள்ளி விட்டது.. அடடே நம்ம லோகியா இது.. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு கலாய்த்துத் தள்ளி விட்டனர் ரசிகர்கள்.
இன்றைய தலைமுறையின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், மாடர்ன் வாழ்க்கையில் இளைஞர்களின் காதல் நிலைகளையும், அதன் ஏற்ற இறக்கங்களுடன் இப்பாடல் சித்தரிக்கிறது. இப்பாடல் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இனிமேல் ஆல்பம் பாடல் இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே, ஸ்ருதி ஹாசன் மீண்டும் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அத்வி சேஷ் நடிக்கும் டகாய்ட் படத்தில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள சர்வதேச படமான தி ஐ படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}