சளி, இருமலா.. மூக்கடைப்பா.. கடுப்பா இருக்கா.. இந்த கஷாயத்தை எடுத்துக்கங்க.. சரியாய்டும்!

Feb 07, 2026,04:48 PM IST

- எஸ். சுமதி


பனிக்கால நோய்களுக்கு இயற்கை வைத்தியத்தில் ஏகப்பட்ட டிப்ஸ் இருக்குங்க.. உரிய முறையில் அவற்றை எடுத்துக் கொள்வது உங்களை சரி செய்யும், நிம்மதியாக உணர வைக்கும்.


குளிர் காலத்தில் ஏற்படும் பெரிய தொல்லை எது என்றால் அது சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்றவைதான். எப்பப் பார்த்தாலும் மூக்கடைத்துக் கொண்டு எரிச்லாக இருக்கும்.


இதுபோன்ற தொல்லைகளுக்கு இந்த இஞ்சி-திப்பிலி கஷாயம் ஒரு சிறந்த மருந்தாக அமையும். செய்வதும் சுலபம். சீக்கிரமே பலனும் கிடைக்கும்.


தேவையான பொருட்கள்




இஞ்சி1 

திப்பிலி 2

மிளகு 4

துளசி 5


தயாரிக்கும் முறை


இஞ்சி, திப்பிலி மற்றும் மிளகு ஆகியவற்றை லேசாக தட்டி வைத்துக் கொள்ளவும். 


ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தட்டிய பொருட்களுடன் துளசி இலைகளையும் சேர்க்கவும்.


நீர் நன்றாகக் கொதித்து சாறு இறங்கியதும் அடுப்பை அணைக்கவும்.


இந்த கஷாயத்தை வடிகட்டி, மிதமான சூட்டில் பருகவும். கஷாயம் காரமாக இருந்தால், குடிக்கும் போது சிறிதளவு தேன் கலந்து பருகலாம் (தேன் கலக்கும் முன் கஷாயம் மிதமான சூட்டில் இருப்பதை உறுதி செய்யவும்).


அதிகாலை அல்லது இரவு தூங்குவதற்கு முன் இதை குடிப்பது அதிக பலன் தரும். பனிக்காலத்தில் குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்ப்பது குணமடைவதை விரைவுபடுத்தும்.


(About the Author.. Mrs. S. Sumathi, M.A.,B Ed., Graduate Teacher (English), Sri KGS HSS, Aduthurai, Thiruvidaimarudur tk, Thanjavur dt)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்