நிலையாமை!

Jan 22, 2026,12:24 PM IST

- பா.பானுமதி


நிலையாமை என்பது நிர்மலமான அழகு 

நிற்பதற்கு இணையாக ஏதுமில்லை

நினைவில் வைத்து பழகு 

இருந்தால் அருமை 

இல்லாவிட்டாலும் அருமை 

இதை அழகாக சொல்வதே 

திருக்குறளின் வளமை 

நல்லார் இருப்பதே பெருமை 

அல்லார் இல்லாத இருப்பதே பெருமை 

நேற்று இருந்தார் 

இன்று இல்லை என்பது நிதர்சனம் 

இன்று இருப்பார் 




நாளை இல்லை என்பது எதார்த்தம் 

நாளை என்பது நமக்கு வருமா என்பது 

நிலையாமையில் நாதம் 

இரக்கம் உள்ளவர்கள் இருப்பதே இதம்

இரக்கமற்றவர்கள் இல்லாது இருப்பதே பதம் 


இருப்பதும் இல்லாத இறப்பதும் 

இலை மறை காய்யாய் சொல்லுவதே வேதம் 

உலகில் உதித்த உயிர்கள் அனைத்தையும் 

நிலையாமை நித்தம் தொடரும் 

அலையாமையால் பேராசையின் விழையாமையால் 

விழித்திருந்தால் சுத்தம் படரும் 

நிலையாமை நீர்த்துப் போகவும் செய்யும்

கணத்தில் வேர்த்து போக செய்யும் 

பார்வை பொருத்து பலது பெய்யும் 

நிலையாமை புரிந்தால் நெஞ்சம் நெகிழும் 

பற்றின்மை திகழும் 

நிம்மதி நிலைக்க அமைதி தழைக்க 

நிலையாமை புரிய முயற்சி செய்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்