முடியலடா.. முடியலையே!

Jan 21, 2026,11:27 AM IST

- பா.பானுமதி


பூ வேண்டும் என்றேன் 

பூவுக்கே பூவா என்கிறாய் 

பொன்னகை வேண்டும் என்றேன் 

உன் புன்னகையில் தோற்று விடும் என்றாய்

தேநீர் குடிக்கலாம் என்றேன்

தேனே நீர் அருந்தலாமா என்கிறாய் 

வாய்விட்டு சிரித்தேன் 

வைரங்கள் கொட்டுகிறது என்றாய் 

வலியால் அழுதேன் 

மருந்து தராமல் வலிக்கு வலி வரட்டும் என்கிறாய் 

ஆலயம் செல்லலாம் என்றேன் 

அழகு தெய்வம் நடந்து வருவதா என்றாய் 




என்ன சமைக்கலாம் என்று கேட்டேன் 

உனை பார்த்தாலே பசிக்கவில்லை என்கிறாய் 

ஊருக்கு போகவா என்றேன் 

ஒளி இழந்து போய்விடும் என்கிறாய் 

மெல்லிசை கேட்டேன் 

இன்னிசை ஒன்று இசை கேட்கிறது என்கிறாய் 


எது பேசினாலும் ஏற்றுக்கொள்ளாமல் 

ஏதோ ஒன்றை உளறுகிறாய்

சம்பந்தமின்றி பேசி சங்கடப்படுத்துகிறாய் 

கேட்டால் 

கவிஞன் என்கிறாய் 

கவிஞனை மணம் செய்து கொண்டதால் 

காலத்திற்கும் கஷ்டம்தானா 

கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு 

எதார்த்தம் தெரியாமல் 

என்ன மனிதர்கள் இவர்கள்...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்