முடியலடா.. முடியலையே!

Jan 21, 2026,11:27 AM IST

- பா.பானுமதி


பூ வேண்டும் என்றேன் 

பூவுக்கே பூவா என்கிறாய் 

பொன்னகை வேண்டும் என்றேன் 

உன் புன்னகையில் தோற்று விடும் என்றாய்

தேநீர் குடிக்கலாம் என்றேன்

தேனே நீர் அருந்தலாமா என்கிறாய் 

வாய்விட்டு சிரித்தேன் 

வைரங்கள் கொட்டுகிறது என்றாய் 

வலியால் அழுதேன் 

மருந்து தராமல் வலிக்கு வலி வரட்டும் என்கிறாய் 

ஆலயம் செல்லலாம் என்றேன் 

அழகு தெய்வம் நடந்து வருவதா என்றாய் 




என்ன சமைக்கலாம் என்று கேட்டேன் 

உனை பார்த்தாலே பசிக்கவில்லை என்கிறாய் 

ஊருக்கு போகவா என்றேன் 

ஒளி இழந்து போய்விடும் என்கிறாய் 

மெல்லிசை கேட்டேன் 

இன்னிசை ஒன்று இசை கேட்கிறது என்கிறாய் 


எது பேசினாலும் ஏற்றுக்கொள்ளாமல் 

ஏதோ ஒன்றை உளறுகிறாய்

சம்பந்தமின்றி பேசி சங்கடப்படுத்துகிறாய் 

கேட்டால் 

கவிஞன் என்கிறாய் 

கவிஞனை மணம் செய்து கொண்டதால் 

காலத்திற்கும் கஷ்டம்தானா 

கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு 

எதார்த்தம் தெரியாமல் 

என்ன மனிதர்கள் இவர்கள்...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?

news

பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!

news

விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!

news

ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!

news

வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!

news

தாலாட்டும் நினைவுகள்!

news

முடியலடா.. முடியலையே!

அதிகம் பார்க்கும் செய்திகள்