- பா.பானுமதி
பூ வேண்டும் என்றேன்
பூவுக்கே பூவா என்கிறாய்
பொன்னகை வேண்டும் என்றேன்
உன் புன்னகையில் தோற்று விடும் என்றாய்
தேநீர் குடிக்கலாம் என்றேன்
தேனே நீர் அருந்தலாமா என்கிறாய்
வாய்விட்டு சிரித்தேன்
வைரங்கள் கொட்டுகிறது என்றாய்
வலியால் அழுதேன்
மருந்து தராமல் வலிக்கு வலி வரட்டும் என்கிறாய்
ஆலயம் செல்லலாம் என்றேன்
அழகு தெய்வம் நடந்து வருவதா என்றாய்

என்ன சமைக்கலாம் என்று கேட்டேன்
உனை பார்த்தாலே பசிக்கவில்லை என்கிறாய்
ஊருக்கு போகவா என்றேன்
ஒளி இழந்து போய்விடும் என்கிறாய்
மெல்லிசை கேட்டேன்
இன்னிசை ஒன்று இசை கேட்கிறது என்கிறாய்
எது பேசினாலும் ஏற்றுக்கொள்ளாமல்
சம்பந்தமின்றி பேசி சங்கடப்படுத்துகிறாய்
கேட்டால்
கவிஞன் என்கிறாய்
கவிஞனை மணம் செய்து கொண்டதால்
காலத்திற்கும் கஷ்டம்தானா
கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு
எதார்த்தம் தெரியாமல்
என்ன மனிதர்கள் இவர்கள்...!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}