-பா. பானுமதி
மாலை விரைவாய்
வீடு திரும்புவேன்
மனம் விரும்பும் இடத்திற்கு
அழைத்துச் செல்வேன்
என்று சொல்லிவிட்டு தான் சென்றேன்
ஆனால்
என்றும் இல்லாதபடி இன்று எக்கச்சக்க வேலை
எல்லாம் முடித்து இரவு வீடு திரும்பிய பின்
உன் இமைகளின் வழியே
ரணமான இதயம் உணர்ந்தேன்

என்ன செய்ய
என் நிலை அப்படி
மன்னித்துவிடு மல்லிகை பந்தலே
உன் மணம் பரப்பி
என் வேலையின் பளு குறைத்துவிடு
இனிமேல் இப்படி ஆகாது என்று சொல்வதற்கில்லை
எப்படி ஆனாலும் எந்நிலை புரிந்து கொள்
இதுவே சூழ்நிலை என தெளிந்து கொள்
அப்போது தான் புயல் வீசாது
தென்றல் வீசாவிட்டாலும்
உண்மையை உரக்க சொல்ல முடியாவிட்டாலும்
உள்ளத்திற்கு சொல்கிறேன் உணர்ந்து கொள்!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}