-பா. பானுமதி
மாலை விரைவாய்
வீடு திரும்புவேன்
மனம் விரும்பும் இடத்திற்கு
அழைத்துச் செல்வேன்
என்று சொல்லிவிட்டு தான் சென்றேன்
ஆனால்
என்றும் இல்லாதபடி இன்று எக்கச்சக்க வேலை
எல்லாம் முடித்து இரவு வீடு திரும்பிய பின்
உன் இமைகளின் வழியே
ரணமான இதயம் உணர்ந்தேன்

என்ன செய்ய
என் நிலை அப்படி
மன்னித்துவிடு மல்லிகை பந்தலே
உன் மணம் பரப்பி
என் வேலையின் பளு குறைத்துவிடு
இனிமேல் இப்படி ஆகாது என்று சொல்வதற்கில்லை
எப்படி ஆனாலும் எந்நிலை புரிந்து கொள்
இதுவே சூழ்நிலை என தெளிந்து கொள்
அப்போது தான் புயல் வீசாது
தென்றல் வீசாவிட்டாலும்
உண்மையை உரக்க சொல்ல முடியாவிட்டாலும்
உள்ளத்திற்கு சொல்கிறேன் உணர்ந்து கொள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
{{comments.comment}}