டெல்லி: 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அக்டோபர் 1ம் தேதி எழுதியுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விளையாட்டு திருவிழா தான் ஒலிம்பிக். இந்த ஒலிம்பிக் விளையாட்டில் உலகளவில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது வழக்கமாகும். இந்த விளையாட்டு போட்டியை தங்கள் நாடுகளில் தான் நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டினரும் போட்டு போடுவது வழக்கம். இந்த போட்டியினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் கிடைக்கும். அத்துடன் இது நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 2036ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் அக்டோபர் 1ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய விளையாட்டுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் பட்சத்தில், போட்டிகள் அனைத்தும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா
தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!
கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!
Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?
வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!
மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}