டெல்லி: 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அக்டோபர் 1ம் தேதி எழுதியுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விளையாட்டு திருவிழா தான் ஒலிம்பிக். இந்த ஒலிம்பிக் விளையாட்டில் உலகளவில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது வழக்கமாகும். இந்த விளையாட்டு போட்டியை தங்கள் நாடுகளில் தான் நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டினரும் போட்டு போடுவது வழக்கம். இந்த போட்டியினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் கிடைக்கும். அத்துடன் இது நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 2036ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் அக்டோபர் 1ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய விளையாட்டுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் பட்சத்தில், போட்டிகள் அனைத்தும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}