Olympics 2036.. ஒலிம்பிக் போட்டி.. இந்தியாவில் நடைபெறுமா?.. இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம்!

Nov 05, 2024,04:41 PM IST

டெல்லி: 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அக்டோபர் 1ம் தேதி எழுதியுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.


உலக அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விளையாட்டு திருவிழா தான் ஒலிம்பிக். இந்த ஒலிம்பிக் விளையாட்டில் உலகளவில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது வழக்கமாகும். இந்த விளையாட்டு போட்டியை தங்கள் நாடுகளில் தான் நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டினரும் போட்டு போடுவது வழக்கம். இந்த போட்டியினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் கிடைக்கும். அத்துடன் இது நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது.




2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.


இதற்கு அடுத்தபடியாக 2036ம்  ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் அக்டோபர் 1ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய விளையாட்டுத்துறை  தகவல் வெளியிட்டுள்ளது. 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் பட்சத்தில், போட்டிகள் அனைத்தும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக

news

ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!

news

சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!

news

தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை

news

மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!

news

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!

news

எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!

news

இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!

அதிகம் பார்க்கும் செய்திகள்