சென்னை: ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முத்திரை வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லையாம். 2 மாதங்கள் பொறுத்திருக்குமாறும், அதன் பிறகு முடிவைச் சொல்வதாகவும் அணி நிர்வாகத்திடம் தோனி கூறியிருக்கிறாராம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் 2024 கோப்பைக் கனவு தகர்ந்து போய் விட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இந்தப் போட்டியில் தோனி விளையாடிய விதமும், அவர் கடுமையாக முயன்ற விதமும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டது. இந்தத் தொடர் தோனிக்கு கடைசி தொடராக இருக்கக் கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனால் தொடரை வென்று கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ஆனால் எல்லாமே கனவாகி விட்டது. இந்த நிலையில் தோனி இப்போதைக்கு ஓய்வு பெற வாய்ப்பில்லை என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அணி நிர்வாகத்திடம் அவர் தனது ஓய்வு முடிவை இதுவரை அறிவிக்கவில்லையாம். 2 மாதங்கள் பொறுத்திருக்குமாறு மட்டுமே அவர் கூறியிருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
தற்போது ராஞ்சிக்குத் திரும்பி விட்டார் தோனி. பெங்களூரு அணியிடம் தோற்ற விதம் அவரை கடுமையாக அப்செட் செய்துள்ளதாம். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் போட்டி முடிந்ததுமே அவர் கிளம்பி சொந்த ஊருக்குப் போய் விட்டார். ஓரிரு மாதங்களில் அவர் தனது ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. அவர் மீண்டும் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பெங்களூருக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த அந்த 110 மீட்டர் சிக்ஸரை அனைவரும் சிலாகிக்கின்றனர். இந்த ஒரு சிக்ஸர் மூலம் தான் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதை தோனி உணர்த்தி விட்டார். எனவே மீண்டும் ஒரு சீசன் அவர் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}