கொல்கத்தா: ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த முதல் போட்டியுடன் தொடக்க விழாவும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
முன்பெல்லாம் கிரிக்கெட் தொடர்கள் என்றாலே உலகக் கோப்பை போட்டிகள், இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிப்பது வழக்கம். ஆனால் அதை மாற்றிப் போட்டது பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள். உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடயே புகழ் பெற்றதாக ஐபிஎல் மாறிப் போயுள்ளது.

ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம்பெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, சிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா போன்ற கிரிக்கெட் வீரர்களால் ஐபிஎல் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இவர்களின் தனித்திறமை குறித்தும் ரசிகர்களிடையே ஆர்வமும் அதிகரித்து வருகிறது. போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் ரசிகர்கள் கலாய்த்தே தள்ளி விடுகின்றனர். அந்த அளவிற்கு இந்த தொடர் அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இந்த முறையாவது பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி தான் வருகிறது. இதனால் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி20 தொடர் ஏலம் ஆரம்பிக்கும்போதே பெங்களூர் அணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்புச் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இடையேயான முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 22 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
வரைவு SOP வெளியானது.. விஜய் கூட்டத்துக்கு இனி.. ரூ. 20 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ICC தயவு செய்து முதல்ல இந்த ரூல்ஸை மாத்துங்க ப்ளீஸ்.. இர்பான் பதான் கோரிக்கை
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!
{{comments.comment}}