கொல்கத்தா: ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த முதல் போட்டியுடன் தொடக்க விழாவும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
முன்பெல்லாம் கிரிக்கெட் தொடர்கள் என்றாலே உலகக் கோப்பை போட்டிகள், இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிப்பது வழக்கம். ஆனால் அதை மாற்றிப் போட்டது பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள். உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடயே புகழ் பெற்றதாக ஐபிஎல் மாறிப் போயுள்ளது.

ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம்பெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, சிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா போன்ற கிரிக்கெட் வீரர்களால் ஐபிஎல் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இவர்களின் தனித்திறமை குறித்தும் ரசிகர்களிடையே ஆர்வமும் அதிகரித்து வருகிறது. போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் ரசிகர்கள் கலாய்த்தே தள்ளி விடுகின்றனர். அந்த அளவிற்கு இந்த தொடர் அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இந்த முறையாவது பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி தான் வருகிறது. இதனால் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி20 தொடர் ஏலம் ஆரம்பிக்கும்போதே பெங்களூர் அணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்புச் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இடையேயான முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 22 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
Chettinad Recipes: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி சமையல்.. காரசாரமான பூண்டு ஊறுகாய்!
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
Nainar Nagendran: ஆளுநர் அர்லேகரை திடீரென சந்தித்த பாஜக நிர்வாகிகள்.. இது தான் விஷயமா?
CV Shanmugam: தவெக-வில் இணைகிறாரா சி.வி.சண்முகம்? ஆலோசனையில் பங்கேற்ற அந்த விஐபி!
Tamil Poem: இந்தத் துறவியின் வேஷம் கலைத்தேன்!
{{comments.comment}}