கொல்கத்தா: ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த முதல் போட்டியுடன் தொடக்க விழாவும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
முன்பெல்லாம் கிரிக்கெட் தொடர்கள் என்றாலே உலகக் கோப்பை போட்டிகள், இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிப்பது வழக்கம். ஆனால் அதை மாற்றிப் போட்டது பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள். உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடயே புகழ் பெற்றதாக ஐபிஎல் மாறிப் போயுள்ளது.

ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம்பெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, சிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா போன்ற கிரிக்கெட் வீரர்களால் ஐபிஎல் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இவர்களின் தனித்திறமை குறித்தும் ரசிகர்களிடையே ஆர்வமும் அதிகரித்து வருகிறது. போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் ரசிகர்கள் கலாய்த்தே தள்ளி விடுகின்றனர். அந்த அளவிற்கு இந்த தொடர் அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இந்த முறையாவது பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி தான் வருகிறது. இதனால் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் டி20 தொடர் ஏலம் ஆரம்பிக்கும்போதே பெங்களூர் அணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்புச் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இடையேயான முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 22 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}