"ஆப்"பில்.. சட்டவிரோதமாக ஒளிபரப்பான ஐபிஎல் மேட்ச்.. புரமோட் செய்த தமன்னாவுக்கு சிக்கல்!

Apr 25, 2024,05:02 PM IST

மும்பை: ஐபிஎல் விளையாட்டு போட்டியை  பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில்  நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த வருடம்  2023ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வியாகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை சட்ட விரோதமாக, பேர்பிளே என்ற செயலியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தினால் வியாகாம் நிறுவனத்திற்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டது.




இந்த மனுவை விசாரித்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக பேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் மீது விசாரணை மேற்கொண்டது. அதன் படி கடந்த 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். அன்று ஆஜராகாத சஞ்சய் தத் அன்று தான் இந்தியாவிலேயே இல்லை என்றும், அதற்கு பதிலாக வேறு ஒரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். 


இந்நிலையில் ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்