மும்பை: ஐபிஎல் விளையாட்டு போட்டியை பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் 2023ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வியாகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை சட்ட விரோதமாக, பேர்பிளே என்ற செயலியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தினால் வியாகாம் நிறுவனத்திற்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக பேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் மீது விசாரணை மேற்கொண்டது. அதன் படி கடந்த 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். அன்று ஆஜராகாத சஞ்சய் தத் அன்று தான் இந்தியாவிலேயே இல்லை என்றும், அதற்கு பதிலாக வேறு ஒரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}