மும்பை: ஐபிஎல் விளையாட்டு போட்டியை பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் 2023ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வியாகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை சட்ட விரோதமாக, பேர்பிளே என்ற செயலியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தினால் வியாகாம் நிறுவனத்திற்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக பேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் மீது விசாரணை மேற்கொண்டது. அதன் படி கடந்த 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். அன்று ஆஜராகாத சஞ்சய் தத் அன்று தான் இந்தியாவிலேயே இல்லை என்றும், அதற்கு பதிலாக வேறு ஒரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!
அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!
கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி
தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!
India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!
இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!
ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!
பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!
{{comments.comment}}