மும்பை: ஐபிஎல் விளையாட்டு போட்டியை பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் 2023ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வியாகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதனை சட்ட விரோதமாக, பேர்பிளே என்ற செயலியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தினால் வியாகாம் நிறுவனத்திற்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக பேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் மீது விசாரணை மேற்கொண்டது. அதன் படி கடந்த 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். அன்று ஆஜராகாத சஞ்சய் தத் அன்று தான் இந்தியாவிலேயே இல்லை என்றும், அதற்கு பதிலாக வேறு ஒரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}