நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா.. இல்லையா.. மாறுபட்ட தகவல்களால் குழப்பம்

Jul 29, 2025,10:40 AM IST

டெல்லி: ஏமன் நாட்டவரை மயக்க ஊசி போட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் கிராண்ட் முப்தி தகவல் வெளியிட்ட நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அது சரியான தகவல் இல்லை. தண்டனை முழுமையாக ரத்தாகவில்லை என்று மறுத்துள்ளது.


இதனால் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்தாகி விட்டதா இல்லையா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கையில், நிமிஷா பிரியாவின் தண்டனை தொடர்பாக சிலர் வெளியிட்டுள்ள தகவல் சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளனர்.




முன்னதாக இந்தியாவின் கிராண்ட் முப்தி எனப்படும் காந்தபுரம்  ஏபி அபூபக்கர் முஸ்லியார். இவரது தலைமையிலான குழுதான் தற்போது ஏமன் நாட்டுத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொல்லப்பட்ட ஏமன் நாட்டவரான மஹ்தியின் குடும்பத்தினருடனும் இவர்கள் பேசி வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாகவே நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்தப் பின்னணியில்தான் தற்போது நிரந்தரமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக முஸ்லியாரின் அலுவலகம் தகவல் வெளியிட்டது. ஆனால் மத்திய அரசுத் தரப்பில் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மாறாக அது சரியான தகவல் அல்ல என்ற விளக்கம் மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் குழப்பம் எழுந்துள்ளது. 


முன்னதாக கிராண்ட் முப்தி அலுவலகம் வெளியிட்ட தகவலில், தலைநகர் சனாவில் நிமிஷா பிரியாவின் தண்டனை தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மரண தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தது.


37 வயதான நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் உள்ளூரைச் சேர்ந்த மஹ்தி என்பவருடன் இணைந்து 2015ம் ஆண்டு கிளினிக் ஒன்றைத் தொடங்கினார். நாளைடவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிளினிக்கின் முழுக் கட்டுப்பாட்டையும் மஹ்தியே எடுத்துக் கொண்டார். நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துக் கொண்டார். இதனால் மஹ்திக்கு மயக்க மருந்து  கொடுத்து பாஸ்போர்ட்டை எடுக்க முயன்றுள்ளார் நிமிஷா. ஆனால் மயக்க ஊசியில் அவர் கொடுத்த மருந்து அதிகமாக மஹ்தியின் உயிரைப் பறித்து விட்டது.


இதையடுத்து நிமிஷா பிரியா மீது கொலை வழக்கு போடப்பட்டு விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?

news

வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை

news

CM MK Stalin: மு.க.ஸ்டாலின் இல்லாத தமிழ்நாடு சட்டசபை.. பெரும் வேதனையில் திமுக!

news

பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக.. கஷ்டப்பட்டு கூட்டணி சேர்ந்தும் பலனில்லையே!

news

போராடும் அதிமுக-திமுக: சீனியர்களின் தோல்விக்கு SIR காரணமா?

news

இட்டுனு வந்து இட்டுனு போறது கஷ்டம்.. தி.நகர் தொகுதியில் திரில் வெற்றியைப் பெற்ற புஸ்ஸி ஆனந்த்!

news

தவெக அரசுக்கு முதல் கோரிக்கை.. கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கோரிக்கை!

news

Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!

news

ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்