- அஸ்வின்
நடனப்புயலாக, நடிகராக, இயக்குநராக வலம் வரும் பிரபுதேவா நடிக்கப் போகும் புதிய படம்தான் சிங்காநல்லூர் சிக்னல். வித்தியாசமான பெயர் மட்டுமல்ல, கதையும் கூட வித்தியாசமானது என்று சொல்கிறார்கள்.
பிரபுதேவா ஹீரோவாகவும், பவ்யா நாயகியாகவும் நடிக்கும் புதிய படம்தான் சிங்காநல்லூர் சிக்னல். பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை ஜே. எம்.ராஜா எழுதி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபாகரன் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் லேபிள் என்ற படத்தையும் பிரபாகரன்தான் தயாரித்திருந்தார் என்பதால் சிங்காநல்லூர் சிக்னல் படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டரில் பிரபுதேவா சிக்னலில் டான்ஸ் ஆடுவது போல உள்ளது. மேலும் போக்குவரத்துக் காவலர் உடையிலும் அவர் இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஒரு போக்குவரத்துக் காவலர் இருந்தார். அவர் பணியாற்றும் ஸ்டைலே அலாதியாக இருக்கும். அதாவது டான்ஸ் ஆடுவது போலவே அவர் தனது வாகன ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வார்.
அந்த சமயத்தில் அது பெரும் வரவேற்பையும், ஆச்சரியத்தையும் பெற்றது. அந்த சமயத்தில்தான் பிரபுதேவாவும் பிரபலமாகி வந்தார். ஒரு அலை பரப்பிக் கொண்டிருந்தார். அவர் மீது இன்ஸ்பைர் ஆகித்தான் அந்தக் காவலர் அப்படி நடனமாடியே தனது பணியைச் செய்து பிரபலமானார். ஒரு வேளை அந்தக் காவலரை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இருப்பினும் இதுவரை இப்படத்தின் கதைக் களம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் நிச்சயம் போக்குவரத்துக் காவலராக பிரபுதேவா நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}