- அஸ்வின்
நடனப்புயலாக, நடிகராக, இயக்குநராக வலம் வரும் பிரபுதேவா நடிக்கப் போகும் புதிய படம்தான் சிங்காநல்லூர் சிக்னல். வித்தியாசமான பெயர் மட்டுமல்ல, கதையும் கூட வித்தியாசமானது என்று சொல்கிறார்கள்.
பிரபுதேவா ஹீரோவாகவும், பவ்யா நாயகியாகவும் நடிக்கும் புதிய படம்தான் சிங்காநல்லூர் சிக்னல். பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை ஜே. எம்.ராஜா எழுதி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபாகரன் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் லேபிள் என்ற படத்தையும் பிரபாகரன்தான் தயாரித்திருந்தார் என்பதால் சிங்காநல்லூர் சிக்னல் படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டரில் பிரபுதேவா சிக்னலில் டான்ஸ் ஆடுவது போல உள்ளது. மேலும் போக்குவரத்துக் காவலர் உடையிலும் அவர் இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஒரு போக்குவரத்துக் காவலர் இருந்தார். அவர் பணியாற்றும் ஸ்டைலே அலாதியாக இருக்கும். அதாவது டான்ஸ் ஆடுவது போலவே அவர் தனது வாகன ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வார்.
அந்த சமயத்தில் அது பெரும் வரவேற்பையும், ஆச்சரியத்தையும் பெற்றது. அந்த சமயத்தில்தான் பிரபுதேவாவும் பிரபலமாகி வந்தார். ஒரு அலை பரப்பிக் கொண்டிருந்தார். அவர் மீது இன்ஸ்பைர் ஆகித்தான் அந்தக் காவலர் அப்படி நடனமாடியே தனது பணியைச் செய்து பிரபலமானார். ஒரு வேளை அந்தக் காவலரை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இருப்பினும் இதுவரை இப்படத்தின் கதைக் களம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் நிச்சயம் போக்குவரத்துக் காவலராக பிரபுதேவா நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
அப்பாவுக்குப் பிறந்த நாள்.. Happy Birthday to my dear Dad!
கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell
சிபிஐ சம்மன்...மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
"ம்ம்... என்னச் சொல்லப் போறானோ? மதன்".. அவளின் (ல்) அவன் (5)
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
{{comments.comment}}