அகமதாபாத் விமான விபத்து.. 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில்.. இதுதான் விமானம் விபத்துக்குள்ளாக காரணமா?

Jul 02, 2025,05:44 PM IST

அகமதாபாத்: அகமதாபாத்-லண்டன் விமான விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து Aircraft Accident Investigation Bureau 

(AAIB) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் என்ஜின் கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்திருக்கலாம் என AAIB தெரிவித்துள்ளது.


விபத்து குறித்து AAIB நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஏர் இந்தியா நிறுவனம், விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தை வைத்து ஒரு Flight Simulation செய்து பார்த்தது. அதாவது, விமானம் புறப்படும்போது எப்படி இருந்ததோ, அதே மாதிரியான சூழ்நிலையை உருவாக்கிப் பார்த்தார்கள். அப்போது, விமானத்தின் லேண்டிங் கியர் கீழே இறங்கிய நிலையிலும், இறக்கைகள் சுருங்கிய நிலையிலும் இருந்தன. இப்படி இருந்தும் விமானம் விபத்துக்குள்ளாகவில்லை. எனவே, விமானத்தை இயக்கியதில் எந்த தவறும் இல்லை என்பது உறுதியாகிறது.




விமானம் புறப்பட்ட சில நொடிகளில், விமானத்தின் Ram Air Turbine (RAT) தானாகவே இயங்கியுள்ளது. RAT என்பது விமானத்தின் இரண்டு என்ஜின்களும் பழுதடையும்போது, விமானத்திற்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு அவசர கால கருவி. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்பு RAT இயங்கியதால், என்ஜின்கள் இரண்டும் ஒரே நேரத்தில் பழுதடைந்தது உறுதியாகிறது.


AAIB ஆய்வு செய்த வீடியோவில், விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு உயர செல்ல முடியாமல் தள்ளாடியது. பின்னர், கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் General Electric (GE) நிறுவனத்தின் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. என்ஜினில் ஏற்பட்ட மின்சார கோளாறு, கலப்பட எரிபொருள் அல்லது என்ஜினை கட்டுப்படுத்தும் சிஸ்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக என்ஜின்கள் செயலிழந்திருக்கலாம் என்று AAIB சந்தேகிக்கிறது.


இதுகுறித்து GE நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. விசாரணை நடந்து கொண்டிருப்பதால், எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனமும் எந்த பதிலும் அளிக்கவில்லை. AAIB இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால், தற்போது விசாரணை என்ஜின்களை சுற்றியே நடக்கிறது. இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதடைவது என்பது மிகவும் அரிதான நிகழ்வு.


ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI-171 விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில், விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகளும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.


இந்த விபத்து குறித்து இரண்டு விதமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. AAIB தொழில்நுட்ப காரணங்களை ஆராய்ந்து வருகிறது. அதே நேரத்தில் உள்துறை செயலாளர் தலைமையிலான குழு, விபத்துக்கான மற்ற காரணங்களை ஆராய்ந்து வருகிறது.


விமான விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. AAIB அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்

news

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

news

தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்