கொழும்பு: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் மோதலில், தொடக்க வீரர் இஷான் கிஷன் தனது அதிரடி அரைசதத்தை பூர்த்தி செய்த கையோடு ஆட்டமிழந்தார். ஆனால் அவர் சேர்த்துக் கொடுத்த ரன்கள், இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
ஆர். பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த கிஷன், இந்திய அணிக்கு ஒரு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். சரமாரியான பவுண்டரிகளை விளாசி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த இஷான் கிஷன், தனக்குக் கிடைத்த சரியான வாய்ப்புகளையெல்லாம் ரன்களாக மாற்றி வெளுத்தெடுத்து விட்டார்.

40 பந்துகளைச் சந்தித்த இஷான் கிஷன், 77 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு மிகப் பெரிய அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்தார். முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மாவை இந்தியா இழந்தபோதிலும், அவருக்கும் சேர்த்து செமத்தியான ரன் விருந்தைக் கொடுத்தார் இஷான் கிஷன்.
கிஷனின் அதிரடியால் இந்திய அணியின் ரன் விகிதம் தற்போது ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேலாக உள்ளது. தொடக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்கோரை எட்டும் நோக்கில் இந்தியா ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. விக்கெட் விழுந்தாலும், களத்தில் உள்ள மற்ற வீரர்கள் இந்த வேகத்தைத் தொடர்வார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்தியா நிச்சயம் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
நானாக என்னிடம் எதுவுமில்லை இப்போது!
புலரும் காலைப்பொழுதினிலே
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
{{comments.comment}}