கொழும்பு: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் மோதலில், தொடக்க வீரர் இஷான் கிஷன் தனது அதிரடி அரைசதத்தை பூர்த்தி செய்த கையோடு ஆட்டமிழந்தார். ஆனால் அவர் சேர்த்துக் கொடுத்த ரன்கள், இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
ஆர். பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த கிஷன், இந்திய அணிக்கு ஒரு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். சரமாரியான பவுண்டரிகளை விளாசி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த இஷான் கிஷன், தனக்குக் கிடைத்த சரியான வாய்ப்புகளையெல்லாம் ரன்களாக மாற்றி வெளுத்தெடுத்து விட்டார்.

40 பந்துகளைச் சந்தித்த இஷான் கிஷன், 77 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு மிகப் பெரிய அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்தார். முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மாவை இந்தியா இழந்தபோதிலும், அவருக்கும் சேர்த்து செமத்தியான ரன் விருந்தைக் கொடுத்தார் இஷான் கிஷன்.
கிஷனின் அதிரடியால் இந்திய அணியின் ரன் விகிதம் தற்போது ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேலாக உள்ளது. தொடக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்கோரை எட்டும் நோக்கில் இந்தியா ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. விக்கெட் விழுந்தாலும், களத்தில் உள்ள மற்ற வீரர்கள் இந்த வேகத்தைத் தொடர்வார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்தியா நிச்சயம் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}