கொழும்பு: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் மோதலில், தொடக்க வீரர் இஷான் கிஷன் தனது அதிரடி அரைசதத்தை பூர்த்தி செய்த கையோடு ஆட்டமிழந்தார். ஆனால் அவர் சேர்த்துக் கொடுத்த ரன்கள், இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
ஆர். பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த கிஷன், இந்திய அணிக்கு ஒரு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். சரமாரியான பவுண்டரிகளை விளாசி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த இஷான் கிஷன், தனக்குக் கிடைத்த சரியான வாய்ப்புகளையெல்லாம் ரன்களாக மாற்றி வெளுத்தெடுத்து விட்டார்.

40 பந்துகளைச் சந்தித்த இஷான் கிஷன், 77 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு மிகப் பெரிய அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்தார். முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மாவை இந்தியா இழந்தபோதிலும், அவருக்கும் சேர்த்து செமத்தியான ரன் விருந்தைக் கொடுத்தார் இஷான் கிஷன்.
கிஷனின் அதிரடியால் இந்திய அணியின் ரன் விகிதம் தற்போது ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேலாக உள்ளது. தொடக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்கோரை எட்டும் நோக்கில் இந்தியா ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. விக்கெட் விழுந்தாலும், களத்தில் உள்ள மற்ற வீரர்கள் இந்த வேகத்தைத் தொடர்வார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்தியா நிச்சயம் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. 7 விக்கெட்களுக்கு 175 ரன்கள்
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலைப்பயணம்!
Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!
சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா
{{comments.comment}}