லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் 10 வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்திய கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரவிகுமார் திவாகரின் நீதிமன்றத்திலிருந்து சுமார் 100 கொலை வழக்குகள் மாவட்ட முதன்மை நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
முசாஃபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வரும் ரவிகுமார் திவாகர். இவரது தீர்ப்புகள் சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஏப்ரல் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 4 மாத காலகட்டத்தில் 1999 முதல் 2019 வரை நடைபெற்ற 10 வெவ்வேறு கொலை வழக்குகளில் மொத்தம் 22 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவை அனைத்தும் மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகள் என்ற பிரிவின் கீழ் தண்டனைக்குட்படுத்தப்பட்டன.

நீதிபதி திவாகர் தொடர்ச்சியாக மரண தண்டனை வழங்கி வந்ததால் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்புள்ளவர்களுக்கு பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரமோத் தியாகியும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மாவட்ட அமர்வு நீதிபதி வீரேந்திர குமார் சிங் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வீரேந்திர குமார் சிங் பிறப்பித்த உத்தரவின்படி, நீதிபதி ரவிகுமார் திவாகரின் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனைக்குரிய தீவிர குற்றங்கள் தொடர்பான சுமார் 100 கொலை வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு, மாவட்ட நீதிபதியின் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
நீதிபதி ரவிகுமார் திவாகர் முன்பு வாரணாசியில் பணியாற்றியபோது, ஞானவாபி வளாகத்தில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு நாடு முழுவதும் கவனம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
{{comments.comment}}