ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து தனது நூறாவது செயற்கைக் கோளான என்விஎஸ் 02 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தவுள்ளது இஸ்ரோ.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த 1979ம் ஆண்டு முதல் ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், முதல் ராக்கெட்டாக எஸ்எல்வி இ 01 மூலம் இந்தியா தனது முதல் செயற்கைக் கோளை, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தியது. அப்போது ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள மைய இயக்குநராக இருந்தவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் ஆவார். அன்று முதல் இதுவரை 99 முறை செயற்கைக் கோள்களை இங்கிருந்து செலுத்தியுள்ளது இஸ்ரோ. இந்த நிலையில் நாளை தனது 100வது மிஷனை அது மேற்கொள்ளவுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஏற்கனவே நிலவை ஆய்வு செய்ய சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் ஒன் போன்ற பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி பல்வேறு உலக நாடுகளை திரும்பிப் பார்க்க சாதனை படைத்தது வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோ தனது நூறாவது செயற்கைக் கோளை ஏவு சாதனை படைக்கவுள்ளது.
ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் என்விஎஸ்- 02 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இருக்கிறது. இது இந்த என் வி எஸ் 02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கவும், பேரிடர் ஏற்படும்போது அதன் தகவல்களை துல்லியமாக தெரிவிக்கவும் பயன்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நாளை காலை 6:30 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. முன்னதாக இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 5:30 மணிக்கு தொடங்கப்பட்டு, தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}