ஸ்ரீஹரிகோட்டாவில் செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. நாளை 100வது செயற்கைக் கோளை ஏவுகிறது!

Jan 28, 2025,06:11 PM IST

ஶ்ரீஹரிகோட்டா:  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து தனது நூறாவது செயற்கைக் கோளான என்விஎஸ் 02 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தவுள்ளது இஸ்ரோ.


ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த 1979ம் ஆண்டு முதல் ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், முதல் ராக்கெட்டாக எஸ்எல்வி இ 01 மூலம் இந்தியா  தனது முதல் செயற்கைக் கோளை, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தியது. அப்போது ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள மைய இயக்குநராக இருந்தவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் ஆவார். அன்று முதல் இதுவரை 99 முறை செயற்கைக் கோள்களை இங்கிருந்து செலுத்தியுள்ளது இஸ்ரோ. இந்த நிலையில் நாளை தனது 100வது மிஷனை அது மேற்கொள்ளவுள்ளது.




இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஏற்கனவே நிலவை ஆய்வு செய்ய சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான்,  சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் ஒன் போன்ற பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி பல்வேறு உலக நாடுகளை திரும்பிப் பார்க்க சாதனை படைத்தது வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோ தனது நூறாவது செயற்கைக் கோளை ஏவு சாதனை படைக்கவுள்ளது.


ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் என்விஎஸ்- 02 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இருக்கிறது. இது இந்த என் வி எஸ் 02 செயற்கைக்கோள்  தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கவும், பேரிடர் ஏற்படும்போது அதன் தகவல்களை துல்லியமாக தெரிவிக்கவும் பயன்படும். 


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நாளை காலை 6:30 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. முன்னதாக இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 5:30 மணிக்கு தொடங்கப்பட்டு, தொடர்ந்து  விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்