ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து தனது நூறாவது செயற்கைக் கோளான என்விஎஸ் 02 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தவுள்ளது இஸ்ரோ.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த 1979ம் ஆண்டு முதல் ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், முதல் ராக்கெட்டாக எஸ்எல்வி இ 01 மூலம் இந்தியா தனது முதல் செயற்கைக் கோளை, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தியது. அப்போது ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள மைய இயக்குநராக இருந்தவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் ஆவார். அன்று முதல் இதுவரை 99 முறை செயற்கைக் கோள்களை இங்கிருந்து செலுத்தியுள்ளது இஸ்ரோ. இந்த நிலையில் நாளை தனது 100வது மிஷனை அது மேற்கொள்ளவுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஏற்கனவே நிலவை ஆய்வு செய்ய சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் ஒன் போன்ற பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி பல்வேறு உலக நாடுகளை திரும்பிப் பார்க்க சாதனை படைத்தது வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோ தனது நூறாவது செயற்கைக் கோளை ஏவு சாதனை படைக்கவுள்ளது.
ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் என்விஎஸ்- 02 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இருக்கிறது. இது இந்த என் வி எஸ் 02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கவும், பேரிடர் ஏற்படும்போது அதன் தகவல்களை துல்லியமாக தெரிவிக்கவும் பயன்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நாளை காலை 6:30 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. முன்னதாக இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 5:30 மணிக்கு தொடங்கப்பட்டு, தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}