டெல்லி: இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் ஏற்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நாளன்றுதான் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சோம்நாத்துக்கு புற்றுநோய் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. தனது வயிற்றில் வலி நிலவி வந்ததால் ஒரு ஸ்கேன் செய்து பார்க்கலாமே என்று போனபோதுதான் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

புற்றுநோய் வந்திருப்பதை அறிந்து சோம்நாத்தும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து டார்மாக் மீடியா நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் சோம்நாத்தே விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சந்திரயான் 3 விண்கலம் செலுத்தப்பட்ட சமயத்தில் எனக்கு வயிற்றில் உபாதை ஏற்பட்டது. அப்போது அதுகுறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை. எனக்கும் தெளிவாக எதுவும் புரியவில்லை. புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்பட்ட அன்று ஒரு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காகப் போனபோதுதான் வந்திருப்பது இரைப்பைப் புற்றுநோய் என்று தெரிய வந்தது. எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. எனது குடும்பத்தினரும் அதிர்ந்து விட்டனர். இஸ்ரோவில் உள்ள எனது சகாக்களும் அதிர்ச்சியாகி விட்டனர்.
இதையடுத்து மேலும் சில ஸ்கேன் சோதனைகளை செய்வதற்காக நான் சென்னைக்கு வந்தேன். அங்கு புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டது. எனது தொழில்முறை சவால்களுடன், இந்த புதிய சவாலையும் நான் சந்திக்க நேரிட்டது. முதலில் ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து கீமோதெரபியும் கொடுக்கப்பட்டது.
நான்கு நாட்கள் நான் மருத்துவமனையில் இருந்தேன். 5வது நாளில் எனது பணியைத் தொடர்ந்தேன். பிறகு எனக்கு வலி இல்லை. தொடர்ந்து செக்கப்புக்குப் போக வேண்டும், ஸ்கேன்களும் பார்க்க வேண்டும். இப்போது நான் முழுமையாக குணமடைந்து விட்டேன். வழக்கம் போல எனது பணிகளையும் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் சோம்நாத்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}