"விக்ரம், பிரக்யான்.. எழுந்திருங்கடா செல்லங்களா".. தட்டி எழுப்பும் விஞ்ஞானிகள்!

Sep 23, 2023,11:06 AM IST

பெங்களூரு: நிலவில் இரவு முடிந்து விடிந்து விட்டதால், தென் துருவப் பகுதியில் உறக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவரையும், விக்ரம் லேண்டரையும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் பயணித்து நிலவை சென்றடைந்தது சந்திரயான் 3. அதன் பின்னர் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரானது ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6 .04 மணி அளவில் நிலவின் தென்முனையில் தரையிறக்கப்பட்டது.




நிலவின் தென் முனையில் இறங்கிய முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்தது. தரை இறங்கிய லேண்டரிலிருந்து பின்னர் பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. இரண்டும் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி வைத்தன. அவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.


ரோவர் நிலவில் மெல்ல நடை போட்டு, நிலவின் தன்மை, காற்று அதில் உள்ள மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டது.  நிலவில் அலுமினியம்,  கால்சியம், இரும்பு, குரோமியம் ,

டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்தது. பிறகு நிலவின் தென் பகுதியின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியது.


ஆய்வுகளை தொடங்கிய நிலையில் நிலவில் இரவு வந்தது. நிலவில் பகல் என்பது 14 நாட்களாகும். அதே போல இரவு என்பதும் 14 நாட்களாகும். அதாவது நம்ம பூமியில் எப்படி ஒரு நாள் என்பது 24 மணி நேரமோ அதுபோல நிலாவில் ஒரு நாள் என்பது 28 நாட்களாகும். இரவு நேரங்களில் நிலவில் உறை பனி மிக மிக அதிகம் இருக்கும். எனவே கடந்த 14 நாட்களாக விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தூக்க நிலையில் வைக்கப்பட்டன.




இந்நிலையில் தற்போது நிலவில் மீண்டும் பகல் வந்துள்ளது. சூரிய ஒளியும் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து லேண்டரையும், ரோவரையும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர் .இந்த முயற்சி இதுவரை பலன் தரவில்லை, இருவரையும் எழுப்ப முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


லேண்டரும், ரோவரும் விழித்து எழுந்து மீண்டும் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது பல்வேறு வகையான புதிய தகவல்களை நம்மால் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்