சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவ விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசி வருகின்றனர். முக்கிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன. ஒரு சில கட்சிகள் நாடாளுமன்ற வேலைகளை தொடங்காமலும், கூட்டணி குறித்த முடிவு தெரிவிக்காமலும் இருந்து வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை விரைவில் முடியவுள்ளது. மறுபக்கம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது வேட்பாளர் விருப்ப மனுக்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது திமுக.
அதன்படி விண்ணப்ப படிவ விநியோகம் இன்று முதல் கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50,000 எனவும், அதற்கான விருப்ப மனுவை ரூ. 2000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
விருப்ப மனு விநியோகம் தொடங்கியதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் களை கட்டியுள்ளது. திமுகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர்.
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}