மிலன்: உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் ஏகப்பட்ட ரசிக்களை ஈர்த்து வைத்துள்ள, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு உடம்பு சரியில்லையாம். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி நீளமான பதிவு போட்டுள்ளார்.
இத்தாலி பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. எப்போதும் புன்னகை பூத்த முகமாக காணப்படும் மெலோனிக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள். குறிப்பாக இந்தியாவில் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் இவர் எடுத்துக் கொண்ட செல்பி பிரபலமானது. அதை விட அந்த செல்பியைப் போட்டு விட்டு, "மெலோடி" என்று இவரே ஹேஷ்டேக் போட்டதும் அது காட்டுத் தீயாகப் பரவியது.
மெலோனிக்கு நம்ம நாட்டில் இன்னும் ரசிகர் மன்றம் மட்டும்தான் திறக்கவில்லை. ஆனால் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போது மெலோனி இந்தியாவுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிலும் பலர் உள்ளனர்.

இந்த நிலையில் மெலோனிக்கு உடம்பு சரியில்லையாம். இதனால் புத்தாண்டைக் கொண்டாட முடியாமல் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பலரும் அவரிடம் நலம் விசாரித்தவண்ணம் உள்ளனராம்.
இதுகுறித்து ஒரு நீளமான டிவீட் போட்டுள்ளார் மெலோனி. அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு சில உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன. இதனால்தான் வீட்டோடு இருக்க வேண்டியதாயிற்று. இப்போது பரவாயில்லை, கொஞ்சம் நல்லாருக்கு.
பொதுவாக நான் எந்த வேலையையும் ஒத்திப் போட மாட்டேன்.. அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக சில வேலைகளை நான் ஒத்திப் போட வேண்டியதாகி விட்டது. இதற்காக மன்னிச்சுங்கங்க. நான் விரைவில் குணமாக வேண்டும் என்று இத்தாலியர்கள் பலரும் எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தீர்கள். அதற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
உடம்பைக் கவனிச்சுக்க வேண்டாமா, இப்படியா இருப்பீங்க என்று சிலர் என்னுடன் வாதிடவும் செய்தீர்கள். அந்த அன்புக்கும் நன்றி. நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தியுள்ளார்கள். அதை மறக்க முடியாது.
எல்லாவற்றையும் விட ஒட்டுமொத்த இத்தாலிக்கும் இந்த 2024ம் ஆண்டு வளர்ச்சி, வெற்றி, நம்பிக்கையை அதிகம் தர வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். நாட்டுக்காக எனது முழு சக்தியையும் செலவிடுவேன். அரசுடன் இணைந்து நாட்டின் எதிர்காலத்தை மேலும் சிறந்ததாக்க முயல்வேன். இதில் அனைவருடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார் மெலோனி.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}