திரிகோணமலை: வரலாற்றிலேயே முதன் முறையாக இலங்கை திரிகோணமலையில் சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கையில் இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு முதல் முறையாக இன்று திரிகோணமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்பதால் ஒட்டுமொத்த இலங்கையும் ஆர்வமாகியுள்ளது.

இலங்கையில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல நாடுகளிலில் இருந்து திரிகோணமலைக்கு ஏராளமானோர் வந்துள்ளனர். பொங்கல் பண்டிகையும், ஜல்லிக்கட்டு போட்டியும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. இதுவரை தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று முதல் இலங்கையிலும் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாகவே திரிகோணமலையில், மாடுபிடி வீரர்கள், மாடுகள்,வாடிவாசல் என அனைத்தும் தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், சுற்றுலா துறை சார்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகளும், 100க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}