விசாகப்பட்டனம்: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி விலகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை மறுத்துள்ளார் பவன் கல்யாண். கூட்டணியில் நீடிக்கிறோம்.. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு மட்டுமே தருவதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வரும் பல்வேறு கட்சிகள் அடுத்தடுத்து விலக ஆரம்பித்துள்ளன. இவர்கள் எல்லாம் விலக மாட்டார்கள், நீடித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஆகும். தமிழ்நாட்டில் பாஜகவின் மிகப் பெரிய பலமே அதிமுகதான். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து விட்டு போய் விட்டது. இப்போது அந்த இழப்பை எப்படி சமாளிப்பது என்று பாஜக அலைபாய்ந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் பாஜகவின் கூட்டணியில் இருந்து வந்த ஜன சேனா கட்சியும் அதிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இக்கட்சி நடிகர் பவன் கல்யாணின் கட்சியாகும். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணியில் சேருவதாக பவன் கல்யாண் கட்சி அறிவித்தாக முன்பு செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பவன் கல்யாண் கூறுகையில், ஆந்திர மாநிலத்தின் மிகப் பெரிய கட்சி தெலுங்கு தேசம். அந்தக் கட்சி மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஆதரவு தர வேண்டியது நமது கடமையாகும். இன்று தெலுங்கு தேசம் கட்சி தடுமாறிக் கொண்டுள்ளது. அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் ஜன சேனாக் கட்சியினரின் ஆதரவும், அரவணைப்பும் தெலுங்கு தேசத்திற்குத் தேவை. இருவரும் இணைந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு கவிழும் என்று கூறியிருந்தார் பவன் கல்யாண்.
பல்டி அடித்த பவன் கல்யாண்
ஆனால் தற்போது அதை மறுத்துள்ளார் பவன் கல்யாண். தனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகவில்லை என்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு மட்டுமே தருவதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார். ஏன் இந்த குழப்பமான நிலைப்பாடு என்று தெரியவில்லை.
தெலுங்கு தேசம் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை. இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில்தான் அந்தக் கட்சிக்கு ஆதரவாக கை கொடுத்துள்ளார் பவன் கல்யாண்.
அதிமுக ஏற்கனவே விலகல்
தென் மாநிலங்களில் வலுவான கட்சியாக பாஜக இருந்து வந்தது கர்நாடகத்தில் மட்டும்தான். அங்கும் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்து விட்டது. தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் எப்படியாவது பெரும் வெற்றியைப் பதிவு செய்து விட அந்தக் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதே அண்ணாமலையை காரணமாக வைத்து கூட்டணியை விட்டு வெளியேறி விட்டது அதிமுக.
இந்த அதிர்ச்சியை அது எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், இது நிரந்தரமா பிரிவா அல்லது சும்மானாச்சுக்கும் டிராமாவா என்ற சந்தேகம் இன்னும் தமிழ்நாட்டில் பலருக்கும் உள்ளது. பிரிவு நிரந்தரமாக இருந்தால் அது பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவேதான் பேட்ச் அப் செய்ய பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
இந்த நிலையில்தான் ஆந்திராவில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் சந்திரபாபு நாயுடுவே மறைமுகமாக பாஜக ஆதரவாளர்தான். அவர் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியதைத் தொடர்ந்தே மக்கள் ஆதரவை இழந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பவன் கல்யாண் அவருடன் கை கோர்ப்பதும் அதேசமயம், பாஜக கூட்டணியில் நீடிப்பதாகவும் கூறியிருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}