தரையிறங்கியபோது விபரீதம்.. ஜெட் விமானத்தில் இடித்து.. தீப்பிடித்து எரிந்த ஜப்பான் விமானம்

Jan 02, 2024,03:50 PM IST
டோக்கியோ:  ஜப்பானில் தரையிறங்கியபோது அங்கு நின்றிருந்த ஜெட் விமானத்தில் இடித்துக் கொண்டதில், பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து போய் விட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும், ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

டோக்கியோ -ஹனேடா விமான நிலையத்தில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 367 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் தரையிறங்கியது. அப்போது ரன்வேயின் மறுபக்கம் நின்று கொண்டிருந்த கோஸ்ட்கார்ட் விமானத்தில் பயணிகள் விமானம் உரசி மோதிக் கொண்டது.

இதனால் பயணிகள் விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்துக் கொண்டு விமானத்தில் பரவ ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் நிறுத்தப்பட்டு விமானத்திலிருந்த பயணிகள், ஊழியர்கள் வேகம் வேகமாக வெளியேற்றப்பட்டு விட்டனர். இதனால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.



ஜப்பானில் நேற்றுதான் சுனாமியும், கடும் நிலநடுக்கமும் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சி போவதற்குள் இன்று விமானம் தீப்பிடித்து எரிந்தது ஜப்பான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. புத்தாண்டு பிறந்த நேரமே சரியில்லையே என்று பலரும் புலம்புகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்