தரையிறங்கியபோது விபரீதம்.. ஜெட் விமானத்தில் இடித்து.. தீப்பிடித்து எரிந்த ஜப்பான் விமானம்

Jan 02, 2024,03:50 PM IST
டோக்கியோ:  ஜப்பானில் தரையிறங்கியபோது அங்கு நின்றிருந்த ஜெட் விமானத்தில் இடித்துக் கொண்டதில், பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து போய் விட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும், ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

டோக்கியோ -ஹனேடா விமான நிலையத்தில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 367 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் தரையிறங்கியது. அப்போது ரன்வேயின் மறுபக்கம் நின்று கொண்டிருந்த கோஸ்ட்கார்ட் விமானத்தில் பயணிகள் விமானம் உரசி மோதிக் கொண்டது.

இதனால் பயணிகள் விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்துக் கொண்டு விமானத்தில் பரவ ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் நிறுத்தப்பட்டு விமானத்திலிருந்த பயணிகள், ஊழியர்கள் வேகம் வேகமாக வெளியேற்றப்பட்டு விட்டனர். இதனால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.



ஜப்பானில் நேற்றுதான் சுனாமியும், கடும் நிலநடுக்கமும் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சி போவதற்குள் இன்று விமானம் தீப்பிடித்து எரிந்தது ஜப்பான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. புத்தாண்டு பிறந்த நேரமே சரியில்லையே என்று பலரும் புலம்புகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்