கோவை: நிதிச்சுமை காரணமாக ஜெயலலிதா தன்னிடம் ரூ.2 கோடி கட்சி பணத்தை கடனாக கேட்டார் என கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அதே வேளையில், கோவையில் ஆலோசனை கூட்டத்தை ஓபிஎஸ் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதில் ஜெயலலிதா பற்றிக் குறிப்பிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓ.பி.எஸ். பேச்சிலிருந்து...
அதிமுகவின் இத்தனை ஆண்டுகால சரித்திரத்தின் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான். என்னிடம் ஜெயலலிதா அந்த பொறுப்பை தந்த போது ரூ.2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் கட்சியின் பணம் நான்கு கோடியானது. ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து எனக்கு தனிப்பட்ட முறையில் பணச்சுமை அதிகமாகிவிட்டது. ஏராளமான வழக்குகளை என்மீது போட்டு இருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பணம் தர வேண்டும் என்று கூறி கட்சி நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார்.
உண்மையில் கண்ணீர் விட வேண்டிய நிகழ்வு அது. உடனே நான் ரெண்டு கோடி ரூபாயை வழங்கினேன். அந்த ரெண்டு கோடி ரூபாயை ஒரே மாதத்தில் திருப்பி அளித்தார் ஜெயலலிதா. இதுதான் வரலாறு.
இன்றைக்கு எங்களை எல்லாம் வம்படியாக வெளியேற்றிவிட்டு அவர்கள் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள். சாதாரண தொண்டனாக இருந்த ஓபிஎஸ் நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்எல்ஏ வாக இருக்க முடியுமா? அமைச்சர் ஆகியும் இருக்க முடியுமா? முதலமைச்சராக இருக்க முடியுமா? என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}