ஜெயலலிதா அப்படியா கேட்டார்?.. ஓபிஎஸ் சொன்ன புதுத் தகவல்.. கேட்கவே ஆச்சரியமா இருக்கே!

Dec 26, 2023,06:31 PM IST

கோவை: நிதிச்சுமை காரணமாக ஜெயலலிதா தன்னிடம்  ரூ.2 கோடி கட்சி பணத்தை கடனாக கேட்டார் என கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்று அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  நடைபெற்றது. அதே வேளையில், கோவையில் ஆலோசனை கூட்டத்தை  ஓபிஎஸ் நடத்தினார்.




அப்போது அவர் பேசியதில் ஜெயலலிதா பற்றிக் குறிப்பிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓ.பி.எஸ். பேச்சிலிருந்து...


அதிமுகவின் இத்தனை ஆண்டுகால சரித்திரத்தின் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான். என்னிடம் ஜெயலலிதா அந்த பொறுப்பை தந்த போது ரூ.2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் கட்சியின் பணம் நான்கு கோடியானது. ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து எனக்கு தனிப்பட்ட முறையில் பணச்சுமை அதிகமாகிவிட்டது. ஏராளமான வழக்குகளை என்மீது போட்டு இருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பணம் தர வேண்டும் என்று கூறி கட்சி நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார். 


உண்மையில் கண்ணீர் விட வேண்டிய நிகழ்வு அது. உடனே நான் ரெண்டு கோடி ரூபாயை வழங்கினேன். அந்த ரெண்டு கோடி ரூபாயை ஒரே மாதத்தில் திருப்பி அளித்தார் ஜெயலலிதா. இதுதான் வரலாறு. 


இன்றைக்கு எங்களை எல்லாம் வம்படியாக வெளியேற்றிவிட்டு அவர்கள் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள். சாதாரண தொண்டனாக இருந்த ஓபிஎஸ் நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்எல்ஏ வாக இருக்க முடியுமா? அமைச்சர் ஆகியும் இருக்க முடியுமா?  முதலமைச்சராக இருக்க முடியுமா?  என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்