கர்நாடக காங்கிரஸ் உடையும்.. 60 எம்எல்ஏக்கள் தாவப் போகிறார்கள்.. குண்டைப் போடும் குமாரசாமி!

Dec 11, 2023,05:30 PM IST

ஹசன்: கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழப் போகிறது. 50 முதல் 60 எம்எல்ஏக்கள் வரை விரைவில் கட்சி தாவுவார்கள் என்று குண்டைப் போட்டுள்ளார் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி.


இப்படித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் கட்சியும் குமாரசாமிக்கு ஆதரவு தந்து கூட்டணி ஆட்சியமைத்தது. ஆனால் பாஜகவின் அதிரடித் திட்டத்தால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவினர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அப்படித்தான் கடந்த பாஜக ஆட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தது.





இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியமைத்துள்ளது. முதல்வர் பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோதும் கூட கட்சி மேலிடம் இருவரையும் அழைத்துப் பேசி சுமூகமாக முடிவுக்கு வந்தது அந்தப் பிரச்சினையும். சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.


இந்த நிலையில்தான் திடீரென குண்டைப் போட்டுள்ளார் குமாரசாமி. கர்நாடக மாநிலம் ஹசன் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசினா். அப்போது கூறுகையில், ஒரு அமைச்சர் தலைமையில் 50 முதல் 60 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப் போகிறார்கள். கர்நாடக அரசு விரைவில் கவிழும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருமே நேர்மையானவர்கள் கிடையாது. அவர்கள் யாருக்குமே விசுவாசமும் கிடையாது என்றார் குமாரசாமி.


பாஜகவின் சூழ்ச்சியால் ஆட்சியைப் பறி கொடுத்தவரான குமாரசாமி இப்போது பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார். இந்த நிலையில் பாஜகவிடம் ஒரு அமைச்சர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேரப் போவதாக அவர் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்