ஹசன்: கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழப் போகிறது. 50 முதல் 60 எம்எல்ஏக்கள் வரை விரைவில் கட்சி தாவுவார்கள் என்று குண்டைப் போட்டுள்ளார் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி.
இப்படித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் கட்சியும் குமாரசாமிக்கு ஆதரவு தந்து கூட்டணி ஆட்சியமைத்தது. ஆனால் பாஜகவின் அதிரடித் திட்டத்தால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவினர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அப்படித்தான் கடந்த பாஜக ஆட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியமைத்துள்ளது. முதல்வர் பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோதும் கூட கட்சி மேலிடம் இருவரையும் அழைத்துப் பேசி சுமூகமாக முடிவுக்கு வந்தது அந்தப் பிரச்சினையும். சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் திடீரென குண்டைப் போட்டுள்ளார் குமாரசாமி. கர்நாடக மாநிலம் ஹசன் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசினா். அப்போது கூறுகையில், ஒரு அமைச்சர் தலைமையில் 50 முதல் 60 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப் போகிறார்கள். கர்நாடக அரசு விரைவில் கவிழும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருமே நேர்மையானவர்கள் கிடையாது. அவர்கள் யாருக்குமே விசுவாசமும் கிடையாது என்றார் குமாரசாமி.
பாஜகவின் சூழ்ச்சியால் ஆட்சியைப் பறி கொடுத்தவரான குமாரசாமி இப்போது பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார். இந்த நிலையில் பாஜகவிடம் ஒரு அமைச்சர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேரப் போவதாக அவர் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}