ஜக்கிய ஜனதாதளத்திற்குள் குழப்பம்.. மத்திய அரசை விமர்சித்த செய்தித் தொடர்பாளர் தியாகி ராஜினாமா!

Sep 01, 2024,11:35 AM IST

பாட்னா:  மத்தியில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்குள், பாஜகவுக்கு எதிரான போக்கு தலை தூக்க ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. பாஜக குறித்து விமர்சித்த ஐக்கிய ஜனதாதளம் கட்சியிந் மூத்த தலைவரான செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.


அவராக ராஜினாமா செய்திருக்க வாய்ப்பில்லை, கட்சித் தலைமை தலையிட்டு அவரை ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சிக்கு முக்கியமான ஆதரவு யார் என்றால் அது தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதாதளமும்தான். இந்த இரு கட்சிகளும் கொடுத்து வரும் ஆதரவு, பாஜகவுக்கு முக்கியமானதாக உள்ளது.




இந்த நிலையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்குள் பாஜகவுக்கு எதிரான கருத்துக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன. அதிருப்தி கிளம்ப ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.  ஐக்கிய ஜனதாதளம்  கட்சியின் செய்தித் தொடர்பாளரான மூத்த தலைவர் கே.சி. தியாகி, மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்டம், பொது சிவில் சட்டம், காஸா போர் உள்ளிட்டவை குறித்து பாஜகவை விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்து வந்தார். இது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இந்த பின்னணியில் திடீரென தனது செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தியாகி. அவருக்குப் பதில் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் புதிய செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


பாஜக தலைமையை சரிக்கட்டும் வகையில் தியாகியை, முதல்வர் நிதீஷ் குமாரே ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தியாகி விலகியதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி விளக்கியுள்ளது.


சமீபத்தில் தியாகி இஸ்ரேல் தாக்குதல் குறித்து பல்வேறு முன்னாள் எம்.பிக்கள் இணைந்து ஒரு கூட்டறிக்கை விட்டிருந்தனர். அதில் தியாகியும் ஒருவர். அதில், பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். சர்வதேச சட்டங்களையும், நீதியையும் மீறும் இன அழிப்பு செயல் இது என்று கண்டித்திருந்தனர். இந்த இனப்படுகொலை குறித்து இந்தியா மெளனமாக இருப்பது நல்லதல்ல என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.


இது பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்தே தற்போது தியாகி வெளியேறியுள்ளார். தியாகி வெளிப்படையாக பேசக் கூடியவர் என்பதால் அவரது கருத்துக்களை பாஜகவினர் ரசிப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

news

ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?

news

தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி

news

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

news

ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்

news

ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!

news

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!

news

எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

அதிகம் பார்க்கும் செய்திகள்