- டி. ஜெனிட்டா ரீனா
இயற்கை எழில் கொஞ்சும் நீர்நிலைகளும், கண்ணைக் கவரும் பச்சைப்பசேல் வயல்வெளிகளும் நிறைந்த அழகிய கிராமம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வயலாநல்லூர். செடி, கொடிகள் சூழ்ந்த இந்த ஊரின் அடையாளமாகவும், பெருமையாகவும் திகழ்வது அங்கு விளையும் 'வயலை எலுமிச்சை'.
எங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சைச் செடிகள் வளர்க்கப்படுவது ஒரு மரபாகவே உள்ளது. மற்ற ஊர் எலுமிச்சைகளை விட, வயலை எலுமிச்சைக்கு என்று ஒரு தனி ரகசியம் உண்டு:
இதில் சாற்றின் அளவு மற்ற ரகங்களை விட மிக அதிகமாக இருக்கும். இதன் அதீத புளிப்புச் சுவை காரணமாக, குறைவான பழங்களைப் பயன்படுத்தினாலே நிறைவான சுவையைப் பெற முடியும்.
இயற்கை தந்த 'எனர்ஜி டிரிங்க்'

இன்றைய காலத்தில் சந்தையில் கிடைக்கும் செயற்கை பானங்களான பூஸ்ட் (Boost), ஹார்லிக்ஸ் (Horlicks) போன்றவற்றை விட, எங்கள் ஊர் எலுமிச்சை சாறு சத்துக்களில் பல மடங்கு மேலானது. வெயிலில் வாடி வரும்போது, வயலை எலுமிச்சை சாற்றில் சிறிதளவு நீரும் உப்பும் கலந்து பருகினால், உடல் களைப்பு நீங்கி கணப்பொழுதில் புத்துணர்ச்சி பிறக்கும்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதற்கு ஏற்ப, வயலை எலுமிச்சை எங்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது சூப்பர் டிரிங்க் ஆகும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உலகையே அச்சுறுத்திய கொரோனா பேரிடர் காலத்தில், வயலை எலுமிச்சைச் சாற்றுடன் இஞ்சி, புதினா, தேன், கருஞ்சீரகம், வெற்றிலை மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து நாங்கள் பருகிய கசாயம், எங்களை நோயிலிருந்து பாதுகாத்தது.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரித்து, உடலுக்குத் தேவையான அபரிமிதமான ஆற்றலைத் தருகிறது.
இயற்கையின் கொடையான இந்த வயலை எலுமிச்சை, வெறும் பழம் மட்டுமல்ல; அது எங்கள் ஊரின் வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் ரகசியம். பாரம்பரியமிக்க இந்த இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றி நாமும் வளமான வாழ்வு பெறுவோம்.
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)
தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு
தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
{{comments.comment}}