புன்னை மரம்!

Jan 28, 2026,03:26 PM IST

- கவிஞர் சு. நாகராஜன்


புன்னை மரமே உன்னை எங்கே தேடுவேன்

களிமண் நிலத்திலும்

உப்பு தண்ணீரிலும் 

செழிப்பாய் வளர்ந்திடுவாய் 

என்று_ அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது


இலையைப் பார்த்தேன் 

பளபளப்பாக மின்னிடுவாய் 

கனியைப் பார்த்தேன் 

கடினமான ஓட்டுக்குள் பாதுகாப்பாய் இருக்கிறாய்

உன்னைப் பற்றிய பாடல்கள் இலக்கியங்களில் இருக்கிறது 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 

நீ வந்து விட்டாய் என்பது அப்பாடலால் புரிகிறது 




உன்னைப்பிழிந்தால் 

எண்ணை தந்திடுவாய் 

உன்னை வளர்த்தால்

நோயை விரட்டிடுவாய்

உந்தன் பூவும் மருந்தாகுமே 

உந்தன் விதையும் குணமாக்குமே 

ஆஹா!புன்னை மரமே நீ எங்களது வீட்டிற்கு வரமே!

உன்னைத் தேடி ஓடுகிறேன்

எந்தன் கண்ணில் படவில்லை ஓ மரமே!

உன்னை தொலைத்தது என் தவறு 

உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்


(கவிஞர் சு.நாகராஜன், அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்