- கவிஞர் சு. நாகராஜன்
புன்னை மரமே உன்னை எங்கே தேடுவேன்
களிமண் நிலத்திலும்
உப்பு தண்ணீரிலும்
செழிப்பாய் வளர்ந்திடுவாய்
என்று_ அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது
இலையைப் பார்த்தேன்
பளபளப்பாக மின்னிடுவாய்
கனியைப் பார்த்தேன்
கடினமான ஓட்டுக்குள் பாதுகாப்பாய் இருக்கிறாய்
உன்னைப் பற்றிய பாடல்கள் இலக்கியங்களில் இருக்கிறது
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
நீ வந்து விட்டாய் என்பது அப்பாடலால் புரிகிறது

உன்னைப்பிழிந்தால்
எண்ணை தந்திடுவாய்
உன்னை வளர்த்தால்
நோயை விரட்டிடுவாய்
உந்தன் பூவும் மருந்தாகுமே
உந்தன் விதையும் குணமாக்குமே
ஆஹா!புன்னை மரமே நீ எங்களது வீட்டிற்கு வரமே!
உன்னைத் தேடி ஓடுகிறேன்
எந்தன் கண்ணில் படவில்லை ஓ மரமே!
உன்னை தொலைத்தது என் தவறு
உன்னிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்
(கவிஞர் சு.நாகராஜன், அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)
tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
{{comments.comment}}