சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலையொட்டி 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் கூறிய பிற தகவல்கள்:

5 மாநிலங்களில் 824 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது
5 மாநிலங்களிலும் வாக்களிக்குத் தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 17.4 கோடி
தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. கேரளா 140, மேற்கு வங்காளம் 294, அஸ்ஸாம் 126, புதுச்சேரி 30 தொகுதிகள் உள்ளன
5 மாநிலங்களில் 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்டுகின்றன
தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடியாகும்
தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
5 மாநிலங்களிலும் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்
1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்
வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது
வெளியில் உள்ள கவுண்டர்களில் செல்போன்களை ஒப்படைத்து விட்டு வாக்களிக்கச் செல்லலாம்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலரில் இடம் பெற்றிருக்கும்
வெப்காஸ்டிங் மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும்
வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}