சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலையொட்டி 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் கூறிய பிற தகவல்கள்:

5 மாநிலங்களில் 824 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது
5 மாநிலங்களிலும் வாக்களிக்குத் தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 17.4 கோடி
தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. கேரளா 140, மேற்கு வங்காளம் 294, அஸ்ஸாம் 126, புதுச்சேரி 30 தொகுதிகள் உள்ளன
5 மாநிலங்களில் 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்டுகின்றன
தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடியாகும்
தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
5 மாநிலங்களிலும் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்
1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்
வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது
வெளியில் உள்ள கவுண்டர்களில் செல்போன்களை ஒப்படைத்து விட்டு வாக்களிக்கச் செல்லலாம்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலரில் இடம் பெற்றிருக்கும்
வெப்காஸ்டிங் மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும்
வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}