சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலையொட்டி 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் கூறிய பிற தகவல்கள்:

5 மாநிலங்களில் 824 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது
5 மாநிலங்களிலும் வாக்களிக்குத் தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 17.4 கோடி
தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. கேரளா 140, மேற்கு வங்காளம் 294, அஸ்ஸாம் 126, புதுச்சேரி 30 தொகுதிகள் உள்ளன
5 மாநிலங்களில் 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்டுகின்றன
தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடியாகும்
தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
5 மாநிலங்களிலும் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்
1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்
வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது
வெளியில் உள்ள கவுண்டர்களில் செல்போன்களை ஒப்படைத்து விட்டு வாக்களிக்கச் செல்லலாம்
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலரில் இடம் பெற்றிருக்கும்
வெப்காஸ்டிங் மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும்
வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}