சபாநாயகர் அப்பாவு சொன்ன ஞானசேகரன் இவர்தான்.. பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தரும் விளக்கம்!

Jan 21, 2025,07:07 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு தம்பி ஞானசேகரன் என்று கூறிப் பேசியது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இந்த நிலையில் அப்பாவு, குறிப்பிட்டுப் பேசிய ஞானசேகரன் யார் என்பது குறித்து பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் விளக்கம் அளித்துள்ளார்.


தம்பி ஞானசேகரன் என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் சிக்கிக் கைதான ஞானசேகரனைத்தான் என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதை மறுத்து பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அவர்கள் பேசியது தொடர்பாக சில வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருவதால் விளக்கங்களை அளிக்க வேண்டி இருக்கிறது




முதலில் அப்பாவு அவர்கள் பேசியது நான் எழுதிய இந்தியா வென்றது புத்தகத்தின் வெளியிட்டு விழா.  அதனால் அதற்கான விளக்கத்தை நான் அளித்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


விழாவிற்கு நிறைய பேர் வந்திருந்தார்கள் அதில் ஒருவர் பெயர் ஞானசேகரன். எனக்கு தனிப்பட்ட முறையில் இவர் யார் என்று தெரியாது. பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழா என்பதால் பொதுமக்களில் ஒருவராகத் தான் அவர் வந்திருக்கிறார். எல் ஐ சி ஏஜெண்ட் ஆக இருப்பவர் போல அங்கிருந்த அனைவருக்கும் விசிட்டிங் கார்டு கொடுத்தார். அவருடன் வந்திருந்த இரண்டு பெண்களும் விசிட்டிங் கார்டு கொடுத்தார்கள்.


நிகழ்ச்சி தொடங்கிய போதே அவரும் மேடை ஏறி வந்து அப்பாவு அவர்களுக்கு துண்டு அணிவித்தார். வயதானவராக இருந்ததாலும் நாங்கள் யாரும் அவரை தடுக்கவில்லை.


அப்பாவு அவர்கள் அவரிடம் உங்கள் பெயர் என்ன என கேட்டார் அதற்கு அந்த நபர் ஞானசேகரன் என சொன்னவுடன், ஐயோ இந்தப் பெயர்தான் எங்களுக்கு இப்போது பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது வழக்கு கூட வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என சிரித்தபடியே சொன்னார்.


பிறகு தனது பேச்சின் போது எதிரில் உட்கார்ந்திருந்த அந்த எல்ஐசி ஏஜென்ட் ஆன ஞானசேகரன் என்பவர் கைத்தட்டி உற்சாகமாக இருந்தார். அதனால் தான் அவரை தம்பி என குறிப்பிட்டு அவரைக் கைகாட்டி பேசினார். அதுதான் தற்பொழுது வழக்கில் சிக்கியுள்ள ஞானசேகரனை தான் தம்பி என அப்பாவு அழைத்ததாக பரவிக் கொண்டிருக்கிறது.


நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வந்த பத்திரிகையாளர்கள் சிலர் சிரித்தபடியே நீங்கள் பேசியதை எப்படியும் வெட்டி ஒட்டி பிரச்சினையாக போகிறார்கள் என அப்பாவு அவர்களிடமே சொல்லி சிரித்தனர்.


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தோழர் இந்திரகுமார் அப்பாவு அவர்களின் பேச்சு குறித்த விளக்கத்தையும் மேடையிலேயே தெரிவித்துவிட்டார். நடந்தது இதுதான் என்பதை தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் அதனால் தான் இந்த பதிவு என்று அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்

news

அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!

news

இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்

news

ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!

news

மியாமி ஜி 20 மாநாடு.. தென் ஆப்பிரிக்க அழைக்கப்படாது.. அமெரிக்கா முடிவு!

news

ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!

news

ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு

news

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

news

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்