லண்டன்: நாட்டு நாட்டு பாடலை என்டிஆர் பாலகிருஷ்ணாவுக்கும், மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும் அர்ப்பணிப்பதாக ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார்.
சமீபத்தில் லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் Jr NTR தனது RRR திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு ஒரு சினிமா கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவின் இரண்டு பெரிய ஆளுமைகளுக்கு மரியாதை செலுத்தும் தருணமாகவும் அமைந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் MM கீரவாணி தலைமையில் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் "நாட்டு நாட்டு" பாடலுக்கு ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். ஜூனியர் என்டிஆர் விழாவில் பேசும்போது, சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் நாட்டு நாட்டு பாடலை அவர்களுக்கு அர்ப்பணித்தார்.
அவர் பேசுகையில், பாலகிருஷ்ணா மற்றும் ராம் சரணின் தந்தை (சிரஞ்சீவி) இருவரும் சேர்ந்து நடனமாடினால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இந்த பாடல் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு ஒரு காணிக்கை. சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரின் அபாரமான நடனத் திறமை தெலுங்கு சினிமாவுக்கு ஒரு அடையாளமாக இருந்தது. அவர்களின் ஆற்றலும், கவர்ச்சியும் தெலுங்கு சினிமாவை உயர்த்தியது என்றார்.
நடனத்தின் ஆழத்தை மட்டுமல்லாமல், RRR திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமான கலாச்சார பெருமை, சினிமா மேன்மை மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் அவர் உணர்த்தினார். RR திரைப்படத்தை S.S.ராஜமௌலி இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான கதை, அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் அற்புதமான இசை ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக "நாட்டு நாட்டு" பாடல் மொழி, பிராந்தியம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்தது.
இப்படத்தில் ராம் சரண், Jr NTR இணைந்து நடித்திருந்தனர். அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.
Jr NTR அடுத்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் "Dragon" என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் ஹ்ரித்திக் ரோஷனுடன் "War 2" என்ற பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். Devara: Part 2 படத்திலும் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
நடப்பாண்டில் முன் கூட்டியே துவங்கியது.. தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு எப்படி..?
இந்திய கிரிக்கெட் அணி.. சச்சின், விராட்டிற்கு பிறகு 4வது இடத்தை பிடிக்க போகும் வீரர் யார்?
லேப்டாப் அதிகம் பார்ப்பதால் கண்ணு எரியுதா.. வலிக்குதா?.. இதை ஃபாலோ பண்ணுங்க
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்.. குற்றவாளிகள் 9 பேருக்கும்.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. அதிரடி தீர்ப்பு!
10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
2027 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பே இல்லையா?
நாட்டு நாட்டு பாடல்... ஜூனியர் என்டிஆர் செய்த செயலால் ஆடிப் போன தெலுங்கு சினிமா
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவிகளே அதிகம் பாஸ்!
ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள்.. தடுத்து நிறுத்தப்போவது எப்போது..டாக்டர் ராமதாஸ் கேள்வி
{{comments.comment}}