லண்டன்: நாட்டு நாட்டு பாடலை என்டிஆர் பாலகிருஷ்ணாவுக்கும், மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும் அர்ப்பணிப்பதாக ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார்.
சமீபத்தில் லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் Jr NTR தனது RRR திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு ஒரு சினிமா கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவின் இரண்டு பெரிய ஆளுமைகளுக்கு மரியாதை செலுத்தும் தருணமாகவும் அமைந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் MM கீரவாணி தலைமையில் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் "நாட்டு நாட்டு" பாடலுக்கு ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். ஜூனியர் என்டிஆர் விழாவில் பேசும்போது, சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் நாட்டு நாட்டு பாடலை அவர்களுக்கு அர்ப்பணித்தார்.

அவர் பேசுகையில், பாலகிருஷ்ணா மற்றும் ராம் சரணின் தந்தை (சிரஞ்சீவி) இருவரும் சேர்ந்து நடனமாடினால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இந்த பாடல் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு ஒரு காணிக்கை. சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரின் அபாரமான நடனத் திறமை தெலுங்கு சினிமாவுக்கு ஒரு அடையாளமாக இருந்தது. அவர்களின் ஆற்றலும், கவர்ச்சியும் தெலுங்கு சினிமாவை உயர்த்தியது என்றார்.
நடனத்தின் ஆழத்தை மட்டுமல்லாமல், RRR திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமான கலாச்சார பெருமை, சினிமா மேன்மை மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் அவர் உணர்த்தினார். RR திரைப்படத்தை S.S.ராஜமௌலி இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான கதை, அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் அற்புதமான இசை ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக "நாட்டு நாட்டு" பாடல் மொழி, பிராந்தியம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்தது.
இப்படத்தில் ராம் சரண், Jr NTR இணைந்து நடித்திருந்தனர். அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.
Jr NTR அடுத்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் "Dragon" என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் ஹ்ரித்திக் ரோஷனுடன் "War 2" என்ற பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். Devara: Part 2 படத்திலும் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
{{comments.comment}}