லண்டன்: நாட்டு நாட்டு பாடலை என்டிஆர் பாலகிருஷ்ணாவுக்கும், மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும் அர்ப்பணிப்பதாக ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார்.
சமீபத்தில் லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் Jr NTR தனது RRR திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு ஒரு சினிமா கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவின் இரண்டு பெரிய ஆளுமைகளுக்கு மரியாதை செலுத்தும் தருணமாகவும் அமைந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் MM கீரவாணி தலைமையில் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் "நாட்டு நாட்டு" பாடலுக்கு ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். ஜூனியர் என்டிஆர் விழாவில் பேசும்போது, சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் நாட்டு நாட்டு பாடலை அவர்களுக்கு அர்ப்பணித்தார்.

அவர் பேசுகையில், பாலகிருஷ்ணா மற்றும் ராம் சரணின் தந்தை (சிரஞ்சீவி) இருவரும் சேர்ந்து நடனமாடினால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இந்த பாடல் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு ஒரு காணிக்கை. சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரின் அபாரமான நடனத் திறமை தெலுங்கு சினிமாவுக்கு ஒரு அடையாளமாக இருந்தது. அவர்களின் ஆற்றலும், கவர்ச்சியும் தெலுங்கு சினிமாவை உயர்த்தியது என்றார்.
நடனத்தின் ஆழத்தை மட்டுமல்லாமல், RRR திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமான கலாச்சார பெருமை, சினிமா மேன்மை மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் அவர் உணர்த்தினார். RR திரைப்படத்தை S.S.ராஜமௌலி இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான கதை, அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் அற்புதமான இசை ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக "நாட்டு நாட்டு" பாடல் மொழி, பிராந்தியம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்தது.
இப்படத்தில் ராம் சரண், Jr NTR இணைந்து நடித்திருந்தனர். அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.
Jr NTR அடுத்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் "Dragon" என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் ஹ்ரித்திக் ரோஷனுடன் "War 2" என்ற பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். Devara: Part 2 படத்திலும் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
{{comments.comment}}