- கா.சா.ஷர்மிளா
பிணிக்கு மத்தியில் உந்தன் பணி....!
முகம் கோணாமல் முழு மனதுடன் செய்யும் பணி...!
மலர்ந்த பூங்கொத்தாய்..
புன்னகை மாறா முனைப்புடனே செய்யும் பணி...!
வாடும் முகங்களுக்கு புத்தொளி வழங்கி
புண்பட்ட உள்ளத்திற்கு மருந்தாக நிற்கும் பணி உந்தன் பணி...!
தாயைப்போல் அன்பு செலுத்தும் பணி...!
தந்தையைப் போல் கண்டிப்பு
காட்டும் பணி...!
முன் பின் தெரியாதவர்களையும்
அன்பாக கவனிக்கும் பணி உந்தன் பணி...!

அருவெறுப்பு நோயாளிகளையும்
கை கழுவி சுத்த கைகளோடு காக்கும் பணி உந்தன் பணி...!
இறைவனின் மறு உருவமாக...!
நோயாளிகளை காப்பதில் முன் நின்று தன்னலம் இன்றி,
பொது நலம் பெரிதென காக்கும் பணி உந்தன் பணி...!
தன் பிள்ளைகளை வீட்டில் தவிக்க வைத்து..
நோயுற்ற பிள்ளைகளுக்கு தாயாய் இருக்கும் பணி உந்தன் பணி...!
செய்யும் தொழிலே தெய்வம் அல்லவா..!
தெய்வமே செய்யும் தொழில் அல்லவோ உந்தன் பணி...!
இன்றும் நம்மில் தெராசாவாக... நைட்டிங்கேலாக... காணும் பணி உந்தன் பணி...!
பல இரவு தூக்கங்களை மறந்து தனக்குள் இருக்கும் துன்பங்களை மறந்து
சிரித்த முகத்தோடு மற்றவர்களின் வலிக்கு மருந்து தரும் பணி உந்தன் பணி...!
அமைதி,அன்பு, கருணையின் நிறம் வெண்மை...!
வெண்ணிற ஆடை அணிந்த தேவதையாக செய்யும் பணி உந்தன் பணி...!
உன்னை செவிலியர் என்பதைவிட...!
தேசத்தின் சமூக சேவையின் தேவதை என்றே சொல்லலாமோ
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}