- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
காலத்தின் குரலினை கூர்ந்து கேளுங்கள்..!!
முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் அன்று.!!
முனிவர்களாய் முழுவேஷம் போடுவோர் இன்று..!!
மண்ணை உரமாக்கும் மண்புழுக்கள் அன்று..!!
மண்ணை விஷமாக்கும் நெகிழிகள் இன்று..!!
குடும்பத்தில் பத்துக்குமேல் குழந்தைகள் அன்று..!!
குடும்பத்தில் குழந்தைக்கே வழியில்லை இன்று..!!
எங்கும் கருத்தடை மையங்கள் அன்று ..!!
எங்கும் கருத்தரிப்பு மையங்கள் இன்று..!!
தூயநீரும், தூயகாற்றும் இலவசம் அன்று ..!!
இரண்டுக்கும் விலையோ விலை இன்று.!!
இயற்கையில் விளைந்த காய்கறிகள் அன்று..!!
இரசாயன கலப்பினக் காய்கறிகளே இன்று...!!
தெருவிற்கு ஒரு தொலைபேசி சாவடி அன்று ..!!.
ஒருவருக்கு ஒரு அலைப்பேசி இன்று..!!

அன்றும்... இன்றும்...!!
பெண் தெய்வமானாலும் அவள் கருவறையில்..!!
பெண்ணிற்கு பூசாரியாய் ஆள உரிமையுண்டோ..?
அன்றில் இருந்து , இன்று வரை,
பரத்தையர், வேசி, விபச்சாரி என்ற
பெண்பால் சொல்லுக்கு எதிர்ப்பாற்சொல்
உலக அகராதியில் உண்டோ..?
அன்றில் இருந்து, இன்று வரை
விதவை, வாழாவெட்டி , மலடி..!! என்ற ,
பெண்ணைக் குறிக்கும் அகராதிச் சொற்கள் ..!!
நவீன யுகத்திலும் அறத்தமிழ் அகராதியில் ,
நீக்கப்படாதது ஏனோ..?
இந்த காலத்தின் குரல் கேட்கிறதா..??
இனி நல்லதே நடக்கும் அன்றோ..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எளிமையின் சிகரம் ஆர். நல்லகண்ணு.. ஒரு சகாப்தத்தின் கதை.. செவ்வணக்கம்!
தோழர் நல்ல கண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது
முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்
திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
நமக்கான வாகனம் இதோ வந்துவிட்டது... இலட்சியத்தை வெல்வோம் - ராமதாஸ் அதிரடி
பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்!
கூட்டம் கூடும்... ஆனால் அது ஓட்டாக மாறாது: மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி!
தோழர் நல்லக்கண்ணு!
{{comments.comment}}