தினம் ஒரு கவிதை.. காலத்தின் குரல் .. அன்றும் இன்றும்!

Jan 29, 2025,04:15 PM IST

- கவிஞாயிறு இரா.  கலைச்செல்வி 


காலத்தின் குரலினை  கூர்ந்து கேளுங்கள்..!!


முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்  அன்று.!!

முனிவர்களாய் முழுவேஷம் போடுவோர் இன்று..!!


மண்ணை  உரமாக்கும்  மண்புழுக்கள் அன்று..!!

மண்ணை  விஷமாக்கும்  நெகிழிகள் இன்று..!!


குடும்பத்தில் பத்துக்குமேல் குழந்தைகள் அன்று..!!

குடும்பத்தில் குழந்தைக்கே வழியில்லை இன்று..!!


எங்கும் கருத்தடை மையங்கள் அன்று ..!!

எங்கும்   கருத்தரிப்பு மையங்கள் இன்று..!!


தூயநீரும், தூயகாற்றும் இலவசம் அன்று ..!!

இரண்டுக்கும் விலையோ விலை  இன்று.!!


இயற்கையில் விளைந்த காய்கறிகள்  அன்று..!!

இரசாயன  கலப்பினக்  காய்கறிகளே  இன்று...!!


தெருவிற்கு  ஒரு தொலைபேசி சாவடி அன்று ..!!.

ஒருவருக்கு ஒரு  அலைப்பேசி இன்று..!!




அன்றும்... இன்றும்...!!

பெண் தெய்வமானாலும் அவள் கருவறையில்..!!

பெண்ணிற்கு பூசாரியாய் ஆள உரிமையுண்டோ..?


அன்றில் இருந்து , இன்று வரை,

பரத்தையர், வேசி, விபச்சாரி  என்ற

பெண்பால் சொல்லுக்கு எதிர்ப்பாற்சொல் 

உலக அகராதியில் உண்டோ..?


அன்றில் இருந்து, இன்று வரை

விதவை, வாழாவெட்டி , மலடி..!! என்ற ,

பெண்ணைக் குறிக்கும் அகராதிச் சொற்கள் ..!!


நவீன யுகத்திலும்  அறத்தமிழ் அகராதியில் ,

நீக்கப்படாதது  ஏனோ..?


இந்த காலத்தின் குரல்  கேட்கிறதா..??

இனி நல்லதே  நடக்கும் அன்றோ..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்