- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
காலத்தின் குரலினை கூர்ந்து கேளுங்கள்..!!
முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் அன்று.!!
முனிவர்களாய் முழுவேஷம் போடுவோர் இன்று..!!
மண்ணை உரமாக்கும் மண்புழுக்கள் அன்று..!!
மண்ணை விஷமாக்கும் நெகிழிகள் இன்று..!!
குடும்பத்தில் பத்துக்குமேல் குழந்தைகள் அன்று..!!
குடும்பத்தில் குழந்தைக்கே வழியில்லை இன்று..!!
எங்கும் கருத்தடை மையங்கள் அன்று ..!!
எங்கும் கருத்தரிப்பு மையங்கள் இன்று..!!
தூயநீரும், தூயகாற்றும் இலவசம் அன்று ..!!
இரண்டுக்கும் விலையோ விலை இன்று.!!
இயற்கையில் விளைந்த காய்கறிகள் அன்று..!!
இரசாயன கலப்பினக் காய்கறிகளே இன்று...!!
தெருவிற்கு ஒரு தொலைபேசி சாவடி அன்று ..!!.
ஒருவருக்கு ஒரு அலைப்பேசி இன்று..!!

அன்றும்... இன்றும்...!!
பெண் தெய்வமானாலும் அவள் கருவறையில்..!!
பெண்ணிற்கு பூசாரியாய் ஆள உரிமையுண்டோ..?
அன்றில் இருந்து , இன்று வரை,
பரத்தையர், வேசி, விபச்சாரி என்ற
பெண்பால் சொல்லுக்கு எதிர்ப்பாற்சொல்
உலக அகராதியில் உண்டோ..?
அன்றில் இருந்து, இன்று வரை
விதவை, வாழாவெட்டி , மலடி..!! என்ற ,
பெண்ணைக் குறிக்கும் அகராதிச் சொற்கள் ..!!
நவீன யுகத்திலும் அறத்தமிழ் அகராதியில் ,
நீக்கப்படாதது ஏனோ..?
இந்த காலத்தின் குரல் கேட்கிறதா..??
இனி நல்லதே நடக்கும் அன்றோ..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி
என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!
தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!
2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா
"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை
மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை
நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்
{{comments.comment}}