Kabosu.. உலக மீம்களின் செல்ல நாயகியாக வலம் வந்த கபோசு நாய் மரணமடைந்தது!

May 24, 2024,01:40 PM IST

டோக்கியோ: கபோசு நாய் காலமாகி விட்டது.. கபோசு நாய் என்று சொல்வதை விட "doge" மீம்களின் நாயகி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்ற முகத்தைக் கொண்டது இந்த நாய்.


ஷிபு இனு ரக நாயான இதன் தோற்றத்தை வைத்துத்தான் ஷிபு இனு கிரிப்டோகாயின் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்த நாயின் உருவத்தைப் பயன்படுத்தி பலரும் மீம்ஸ் போட்டு கலக்கி வந்தனர். அந்த அளவுக்குப் பிரபலமானது இந்த நாய். இடையில் கூட இந்த நாயின் முகத்தை தனது எக்ஸ் தளத்தின் லோகோவாக மாற்றி கலகலப்பை ஏற்படுத்தியிருந்தார் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கபோசு நாய் தற்போது இறந்து விட்டது. 




முதலில் "doge" மீம்ஸ் மூலமாக கபோசு நாய் பிரபலமானது. இதையடுத்தே இதை இன்ஸ்பிரேஷனாக வைத்து கிரிப்டோகாயின்கள் உருவாக்கப்பட்டன.  கிரிப்டோ கரன்சி துறையில் இந்த நாயை வைத்து ஏகப்பட்டது நடந்துள்ளது. ஜப்பானின் நரிடா நகரில்தான் கபோசு வசித்து வந்தது. அதன் இறுதிச் சடங்குகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக அதன் உரிமையாளர் அட்சுகோ சாடோ அறிவித்துள்ளார்.


மரணத்திற்கு முன்பு தனது தோளில் சாய்ந்து கபோசு படுத்துத் தூங்கியதாகவும், தூங்கப் போவதற்கு  முன்பு நிறைய தண்ணீர் குடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தூக்கத்திலேயே கபோசு உயிர் பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கடந்த 2022ம் ஆண்டு கபோசுவுக்கு கல்லீரல் நோய் வந்திருப்பதும், லூக்கேமியா வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். கபோசுவின் உரிமையாளர் கூறுகையில், உலகிலேயே மிகவும் சந்தோஷமான நாய் கபோசுதான். இப்போது கூட அது தூங்குவது போல எங்களுக்கு அருகே படுத்துள்ளது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்