டோக்கியோ: கபோசு நாய் காலமாகி விட்டது.. கபோசு நாய் என்று சொல்வதை விட "doge" மீம்களின் நாயகி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்ற முகத்தைக் கொண்டது இந்த நாய்.
ஷிபு இனு ரக நாயான இதன் தோற்றத்தை வைத்துத்தான் ஷிபு இனு கிரிப்டோகாயின் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்த நாயின் உருவத்தைப் பயன்படுத்தி பலரும் மீம்ஸ் போட்டு கலக்கி வந்தனர். அந்த அளவுக்குப் பிரபலமானது இந்த நாய். இடையில் கூட இந்த நாயின் முகத்தை தனது எக்ஸ் தளத்தின் லோகோவாக மாற்றி கலகலப்பை ஏற்படுத்தியிருந்தார் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கபோசு நாய் தற்போது இறந்து விட்டது.

முதலில் "doge" மீம்ஸ் மூலமாக கபோசு நாய் பிரபலமானது. இதையடுத்தே இதை இன்ஸ்பிரேஷனாக வைத்து கிரிப்டோகாயின்கள் உருவாக்கப்பட்டன. கிரிப்டோ கரன்சி துறையில் இந்த நாயை வைத்து ஏகப்பட்டது நடந்துள்ளது. ஜப்பானின் நரிடா நகரில்தான் கபோசு வசித்து வந்தது. அதன் இறுதிச் சடங்குகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக அதன் உரிமையாளர் அட்சுகோ சாடோ அறிவித்துள்ளார்.
மரணத்திற்கு முன்பு தனது தோளில் சாய்ந்து கபோசு படுத்துத் தூங்கியதாகவும், தூங்கப் போவதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தூக்கத்திலேயே கபோசு உயிர் பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2022ம் ஆண்டு கபோசுவுக்கு கல்லீரல் நோய் வந்திருப்பதும், லூக்கேமியா வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். கபோசுவின் உரிமையாளர் கூறுகையில், உலகிலேயே மிகவும் சந்தோஷமான நாய் கபோசுதான். இப்போது கூட அது தூங்குவது போல எங்களுக்கு அருகே படுத்துள்ளது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}