தேசிய விருதுகள்.. "கடைசி விவசாயி" நல்லாண்டிக்கு கெளரவம்.. 2 விருதுகளை அள்ளியது!

Aug 24, 2023,06:46 PM IST

டெல்லி: 69வது தேசிய திரைப்பட விருதுகளில், கடைசி விவசாயி படத்துக்கு 2  விருதுகள் கிடைத்துள்ளன. பெரிய அளவில் இந்த முறை தமிழுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. அதில் தமிழுக்கு ஓரளவுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. அதுகுறித்துப் பார்க்கலாம்.




மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படத்துக்கு 2 விருதுகள் கிடைத்தன. அப்படத்தில் நடித்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு குறிப்பு விருது கிடைத்தது. அதேபோல தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டது. வயலின் இசைமேதை டி.என்.கிருஷ்ணன் பற்றிய ஆவணப் படத்துக்கும் விருது கிடைத்துள்ளது.




திரைப்படங்கள் அல்லாத பிரிவில் தமிழுக்கு குறிப்பிட்ட சில விருதுகள் கிடைத்துள்ளன. கருவறை குறும்படத்துக்காக.. ஸ்ரீகாந்த் தேவா விருது பெற்றுள்ளார். அதேபோல பி. லெனின் இயக்கிய சிற்பிகளின் சிற்பங்கள் குறும்படத்துக்கு சிறந்த கல்வித் திரைப்பட விருது கிடைத்துள்ளது. பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு ஏக் தா கான் குறும்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.




ஆர். பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் பாடியிருந்த பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்