- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
சுட்டெரிக்கும் வெயில்;
தன் புடவையையே
குடையாக்கிய தாய்!
ஓடிக்கொண்டே இருக்கிறது கடிகாரம்;
நகராமல் நிற்கிறது
கடந்த கால நினைவுகள்!
மரண வீட்டின்
அழுகுரல்களுக்கு நடுவே,
பசிக்கு அழும் குழந்தை!
நிலவொளியில்
பளபளக்கிறது...
பிச்சைக்காரனின் காலிப் பாத்திரம்!

கான்கிரீட் காடுகள்;
கூடு கட்ட வழியின்றி
மின்சாரக் கம்பியில் குருவிகள்!
வாடியது விவசாயி முகம்!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
என் வீட்டு செல்ல நாய்க்குட்டி!
Positivity of life.. நேர்மறையான வாழ்க்கை!
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
சிந்தனை.. கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
சிவனே! போற்றி! போற்றி.. அழகிய சிங்கரின் என்பா
சிந்தனைச் சிதறல்.. உரிமையென உணர்ந்து உணர்வோடு கொண்டாடுவோம்!
அமைதியாய் இருக்கும் புயல்!
{{comments.comment}}