- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
பகலவன்தோன்றும் முன் ,
பதறி துயில் எழுந்து..!!
அரக்கப் பறக்க வீட்டில்,
அனைத்தும் முடித்து ,
பேருந்தில் புளிமூட்டையாய்,
தன்னை திணித்து,
அலுவலகம் அடைந்து ,
அனைத்து வேலைகளையும் முடித்து,
மாலை விழி பிதுங்கி வீடு வந்து,
மறுபடியும் அடுக்கனையில் புகுந்து.!!

அவதி அவதியாய் ...
அனைத்து வேலையையும் முடித்து,
குழந்தைக்கு ஆசிரியராகி, அதன்
குறை கேட்டு , நிவர்த்தி செய்து,
அடுத்த நாள் மெனு தீர்மானித்து,
அயர்ந்து தூங்கச் செல்கையில்,
மணி நள்ளிரவு.
மறுநாள் அதுவே தொடர்கதை.
---
யாருக்கு தெரியும்..?
பெண்ணே!!!
நீ...நீ...நீ...நீ....எதிர்கொண்ட
போராட்டங்கள் ,சவால்கள்..!!
அவமானங்கள், மனதின் வலிகள்..!!
தூங்காத இரவுகள்,
தூங்கிய சோகங்கள் ..!!
இறந்து போன உன் ஆசைகள்!!
கனவாகிப் போன கனவுகள்!!!
யாருக்கு தெரியும்??
இன்றைய உன் வெற்றி
புன்னகை மட்டுமே!!!!
அனைவருக்கும் தெரியும்..!!
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
நீ தானே எந்தன் பவள மல்லி!
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!
தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!
ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
{{comments.comment}}