கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Jun 22, 2024,06:19 PM IST
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மெத்தனால்  கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 193 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் தற்போது வரை 55 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் பலர் கிசிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.



55 பேர் உயிர் இழந்த நிலையில் மேலும்,  உயிரிழப்புக்கள் ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்ததில் கண்பார்வை இழந்தவர்கள் 8 உள்ளனர். பார்வை இழந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து எற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர் விஜய் உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்ததுடன், டாக்டர்களிடமும் அவர்களது நிலை குறித்துக் கேட்டறிந்தார்கள். பலியானவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, கள்ளச்சாராய சாவுகள் நடந்து ஊரே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்து தனது சிறு வயது மகளுடன் திண்ணையில் படுத்துத் தூங்கிய காட்சி பார்ப்போரை அதிர வைத்துள்ளது. அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு பொதுமக்களே அனுப்பி வைத்தனர். எத்தனை பட்டும் திருந்த மாட்டேன் என்று மக்களில் சிலர் இருப்பது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்