கல்வியா?? செல்வமா??வீரமா?? (கவிதை)

May 21, 2025,04:23 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


கல்வி


கல்வியே வாழ்வின் கலங்கரை விளக்கம் ..!!

கல்வியே ஏற்றமிகு வாழ்விற்கு  அச்சாணி ..!!


கல்வியே தன்னம்பிக்கையின் சுடர்ஒளி ..!!

கல்வியே  ஏழு தலைமுறைக்கும் மூலதனம்..!!


கல்வியே வறுமையை போக்கும் கவசம்  ..!!

 கல்வியே எவரையும் வசப்படுத்தும் சக்தி..!!


அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ..!!

அறிவு என்னும் பெட்டகத்தை திறக்க உதவும்  சாவி..!!


 அறியாமையை அகற்றும் அற்புத விளக்கு..!!

அழிவற்ற கல்வியே மனிதவாழ்வின் திருப்புமுனை..!!


--


செல்வம் 




வாழ்க்கை என்னும் ஓடத்தில் இதுவே பாய் மரம் ..!!

வாழ்வின் அடிப்படைத் தேவை பொருட் செல்வம்..,!!


செல்வம் என்பது பொன் பொருள் மட்டுமல்ல ..!!

செல்வத்துள் சிறந்த செல்வம் கல்விச் செல்வம்..!!


ஆரோக்கியம் அனைவருக்கும் அரிய செல்வம் ..!!

அன்பு  அமைதியான வாழ்விற்கான செல்வம் ..!!


உழைப்பின் வேர்வையில் கிடைக்கும்  செல்வம்..!!

உணவு ,உடை, உறையுள்..க்கு  தேவை செல்வம்..!!


அளவோடு இருந்தால் வாழ்வில் நிம்மதி..,!!

அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சு ..!!


---


வீரம்


அநீதியால் இருள் சூழ்ந்த தேசம்,..!!

அவலத்தின் அழுகுரல் எங்கும் ஓலமிடுகிறது..!!


தனித்தே எழுகிறான் வீரன் ஒருவன்..!!

தர்மத்திற்காக போராடி நீதிக்காக வாழ்ந்து ...


அக்கிரமத்தின் ஆணவத்தை அளிக்கிறான்.

அநியாயத்திற்கு எந்த  நிலையிலும் ...


அடிபணியாமல்  வீறு கொண்டு எழுகிறான்.

வீரத்தின் அடிப்படை இலக்கணம் இதுவே..!!


அயர்ந்து சோர்ந்து  இருந்த உள்ளங்களுக்கு ...

ஊக்கம் அளித்து  புதுவாழ்வு படைக்கிறான்..!!


இதுவன்றோ வீரம்..!!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்