- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
கல்வி
கல்வியே வாழ்வின் கலங்கரை விளக்கம் ..!!
கல்வியே ஏற்றமிகு வாழ்விற்கு அச்சாணி ..!!
கல்வியே தன்னம்பிக்கையின் சுடர்ஒளி ..!!
கல்வியே ஏழு தலைமுறைக்கும் மூலதனம்..!!
கல்வியே வறுமையை போக்கும் கவசம் ..!!
கல்வியே எவரையும் வசப்படுத்தும் சக்தி..!!
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ..!!
அறிவு என்னும் பெட்டகத்தை திறக்க உதவும் சாவி..!!
அறியாமையை அகற்றும் அற்புத விளக்கு..!!
அழிவற்ற கல்வியே மனிதவாழ்வின் திருப்புமுனை..!!
--
செல்வம்
வாழ்க்கை என்னும் ஓடத்தில் இதுவே பாய் மரம் ..!!
வாழ்வின் அடிப்படைத் தேவை பொருட் செல்வம்..,!!
செல்வம் என்பது பொன் பொருள் மட்டுமல்ல ..!!
செல்வத்துள் சிறந்த செல்வம் கல்விச் செல்வம்..!!
ஆரோக்கியம் அனைவருக்கும் அரிய செல்வம் ..!!
அன்பு அமைதியான வாழ்விற்கான செல்வம் ..!!
உழைப்பின் வேர்வையில் கிடைக்கும் செல்வம்..!!
உணவு ,உடை, உறையுள்..க்கு தேவை செல்வம்..!!
அளவோடு இருந்தால் வாழ்வில் நிம்மதி..,!!
அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சு ..!!
---
வீரம்
அநீதியால் இருள் சூழ்ந்த தேசம்,..!!
அவலத்தின் அழுகுரல் எங்கும் ஓலமிடுகிறது..!!
தனித்தே எழுகிறான் வீரன் ஒருவன்..!!
தர்மத்திற்காக போராடி நீதிக்காக வாழ்ந்து ...
அக்கிரமத்தின் ஆணவத்தை அளிக்கிறான்.
அநியாயத்திற்கு எந்த நிலையிலும் ...
அடிபணியாமல் வீறு கொண்டு எழுகிறான்.
வீரத்தின் அடிப்படை இலக்கணம் இதுவே..!!
அயர்ந்து சோர்ந்து இருந்த உள்ளங்களுக்கு ...
ஊக்கம் அளித்து புதுவாழ்வு படைக்கிறான்..!!
இதுவன்றோ வீரம்..!!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
அரபிக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!
அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஏன்?.. அரசு தரும் விளக்கம்
கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி அதிரடியாக பணியிட மாற்றம்
வளையங்குளம் துயர நிகழ்வு.. இதுதான் இந்தியாவே வியக்கும் திமுக அரசின் 4 ஆண்டு காலச் சாதனையா? : சீமான்
மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேணும்.. பசங்களைப் பார்த்துக்கணும்.. ஆர்த்தி ரவி அதிரடி டிமாண்ட்!
எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
ரீவிசிட் அடிக்கிறதா கொரோனா.. நிலவரம் என்ன?.. டாக்டர் பரூக் அப்துல்லா சொல்வதைக் கேளுங்க!
தமிழ்நாட்டின் நிதி உரிமையை வெளிப்படுத்த.. 24ம் தேதி டெல்லி செல்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}