டிரம்ப்பை முந்துகிறார் கமலா ஹாரிஸ்.. லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில்.. மகிழ்ச்சியில் டெமாக்கிரட்ஸ்!

Jul 24, 2024,04:56 PM IST

வாஷிங்டன்:   அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அதிபர் ஜோ பிடன் விலகி விட்ட நிலையில் புதிதாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை விட, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகம் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.


டொனால்ட் டிரம்ப்புக்கு 42 சதவீத ஆதரவும், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீத ஆதரவும் காணப்படுகிறது. இது சிறிய அளவிலான லீட்தான் என்றாலும் கூட வரும் நாட்களில் கமலா ஹாரிஸ் அதிரடியாக செயல்படும்போது இந்த ஆதரவு வித்தியாசம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ராய்ட்டர்ஸ் - இப்ஸாஸ் இணைந்து எடுத்துள்ளன. பிடன் தனது முடிவை அறிவித்த 2 நாட்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு இது. 




முந்தைய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸும், டிரம்ப்பும் சம அளவில் தலா 44 சதவீத ஆதரவுடன் இருந்தனர். தற்போது டிரம்ப்பை முதல் முறையாக முந்தியுள்ளார் கமலா ஹாரிஸ் என்பது ஜனநாயகக் கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விரைவில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். தற்போது அவர் மிகப் பெரிய அளவில் வேட்பாளர் விவாதத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த வேட்பாளர் விவாதத்தின்போதுதான் ஜோ பிடன் செல்வாக்கு வெகுவாக சரிந்தது. அதே இடத்தில் அதிரடி காட்டி டிரம்ப்பை காலி செய்ய திட்டமிட்டுள்ளார் கமலா ஹாரிஸ். அவரது பேச்சுத் திறன் அனைவருக்கும் தெரிந்ததுதான். மேலும் அழுத்தம் திருத்தமாகவும் பேசக் கூடியவர். இதனால் வரும் நாட்களில் விவாதங்களில் கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று ஜனநாயகக் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்