சென்னை: இயக்குநர் மணிரத்தினம் - கமல்ஹாசன் இணைந்திருக்கும் படமான தக் லைஃப், படப்படிப்பு வருகின்ற 18ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய இந்தியன் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழையும் பொழிந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் படப்படிப்பு தற்பொழுது முடிந்துள்ளது.
இந்நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் தக் லைஃப். இந்த படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க நாசரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் - மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் படம் வந்து 35 ஆண்டுகளுக்கு பின்னர் தற்பொழுது இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கமல்ஹாசனின் 234வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது. இதன் புரமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 18ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இந்தியன் 2 முடித்த கையோடு இப்போது தக் லைபில் இறங்கப் போகிறார். அதேபோல பிக்பாஸ் இறுதிச்சுற்றும் வந்து விட்டது. அதிலும் அவர் அடுத்து பிசியாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கமல் - மணிரத்தினம் கூட்டணி என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}