சென்னை: இயக்குநர் மணிரத்தினம் - கமல்ஹாசன் இணைந்திருக்கும் படமான தக் லைஃப், படப்படிப்பு வருகின்ற 18ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய இந்தியன் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழையும் பொழிந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் படப்படிப்பு தற்பொழுது முடிந்துள்ளது.
இந்நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் தக் லைஃப். இந்த படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க நாசரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் - மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் படம் வந்து 35 ஆண்டுகளுக்கு பின்னர் தற்பொழுது இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கமல்ஹாசனின் 234வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது. இதன் புரமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 18ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இந்தியன் 2 முடித்த கையோடு இப்போது தக் லைபில் இறங்கப் போகிறார். அதேபோல பிக்பாஸ் இறுதிச்சுற்றும் வந்து விட்டது. அதிலும் அவர் அடுத்து பிசியாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கமல் - மணிரத்தினம் கூட்டணி என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}