இந்தியாவுக்கு எதிரான.. 3வது டெஸ்ட் போட்டியிலும் கனே வில்லியம்சன் விளையாட மாட்டார்!

Oct 29, 2024,11:34 AM IST

மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே நியூசிலாந்து வென்று விட்ட நிலையில் முதல் இரு போட்டிகளிலும் விளையாடாத நட்சத்திர வீரர் கனே வில்லியம்சன், 3வது போட்டியிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக கனே வில்லியம்சன் 3வது டெஸ்ட்டில் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ள கனே வில்லியம்சன், இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை. ஓய்வில்தான் இருந்து வருகிறார்.  தற்போது 3வது டெஸ்ட் போட்டியிலும் அவர் ஆட வேண்டாம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 



இங்கிலாந்து அணி அடுத்த மாதம் நியூசிலாந்து செல்கிறது. இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நவம்பர் 28ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹாக்ளி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு வில்லியம்சன் முக்கியம் என்பதால் அவருக்கு முழு ஓய்வளித்து தயார் நிலைக்குக் கொண்டு வர நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.  தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால்தான் அவரை இந்தியத் தொடரில் ஆடுவதிலிருந்து விலக்கி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக நியூசிலாந்து கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 12 ஆண்டுகளில் டெஸ்ட் தொடரை உள்ளூரில் இழக்காத இந்தியா நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வியுற்று 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து விட்டது. தற்போது 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்