தூத்துக்குடி : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், மீட்பு பணியினர் மற்றும் அதிகாரிகளுடன் தானே களத்தில் இறங்கி கலக்கி வருகிறார் திமுக எம்.பி.,யான கனிமொழி.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் பார்லிமென்ட்டில் சமீபத்தில் பாதுகாப்பை வளையங்களையும் மீறி உள்ளே நுழைந்த 2 பேர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்கை கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பலர் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். அதோடு அவையிலும் கூச்சலிட்டனர். இதனால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 33 எம்பி.,க்கள் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக.,வை சேர்ந்த லோக்சபா எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 திமுக எம்பி.,க்களில் கனிமொழியும் ஒருவர் .

கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக டில்லியில் நடக்கும் எம்.பி.,க்கள் கூட்டம் அனைத்திலும் பங்கேற்று மத்திய அரசை கேள்வி கேட்டு வந்தார் கனிமொழி. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளம் பாதிக்கப்பட்டதும் உடனடியாக கிளம்பி தூத்துக்குடி வந்துவிட்டார் கனிமொழி. தூத்துக்குடி தொகுதி எம்.பி.,யான கனிமொழி, தனது தொகுதி மக்கள் வெள்ளத்தில் இருப்பது, பார்லி., கூட்டம், அரசியல் போராட்டம் அனைத்தையும் ஓரமாக வைத்து விட்டு அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி வேலை செய்வது அந்த தொகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் படையினருடன் படகில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசியது, அவர்களுக்கு தேவையானவற்றை செய்வது என அதிகாரிகள், அமைச்சர்களுடன் சேர்ந்து தானும் களத்திற்கு நேரடியாக சென்று கலக்கி வருகிறார் கனிமொழி. அது மட்டுமல்ல தான் செல்லும் இடங்களில் தற்போது என்ன நிலவரம், என்ன நடக்கிறது என்ற தகவல்களையும் போட்டோக்களையும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

வழக்கமாக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து விட்டு சென்று விடுவார்கள். அதற்கு பிறகு அதிகாரிகள் தான் மற்ற பணிகளை கவனித்துக் கொள்வார்கள். ஆனால் கனிமொழி மிக சாதாரணமாக களத்தில் இறங்கி பணியாற்றுவது கட்சி, அரசியல் தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. தூத்துக்குடி புஷ்பாநகர் பகுதியில் வீட்டில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கனிமொழி அனுப்பி வைத்தது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. நேரிலும், சமூக வலைதளங்களிலும் கனிமொழிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
கடவுளால் அழகாக வடிவமைக்கப்பட்டவர்கள்.. WOMEN EMPOWERMENT
அப்பாவுக்குப் பிறந்த நாள்.. Happy Birthday to my dear Dad!
கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell
சிபிஐ சம்மன்...மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
"ம்ம்... என்னச் சொல்லப் போறானோ? மதன்".. அவளின் (ல்) அவன் (5)
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
{{comments.comment}}