தூத்துக்குடி : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், மீட்பு பணியினர் மற்றும் அதிகாரிகளுடன் தானே களத்தில் இறங்கி கலக்கி வருகிறார் திமுக எம்.பி.,யான கனிமொழி.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் பார்லிமென்ட்டில் சமீபத்தில் பாதுகாப்பை வளையங்களையும் மீறி உள்ளே நுழைந்த 2 பேர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்கை கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பலர் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். அதோடு அவையிலும் கூச்சலிட்டனர். இதனால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 33 எம்பி.,க்கள் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக.,வை சேர்ந்த லோக்சபா எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 திமுக எம்பி.,க்களில் கனிமொழியும் ஒருவர் .

கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக டில்லியில் நடக்கும் எம்.பி.,க்கள் கூட்டம் அனைத்திலும் பங்கேற்று மத்திய அரசை கேள்வி கேட்டு வந்தார் கனிமொழி. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளம் பாதிக்கப்பட்டதும் உடனடியாக கிளம்பி தூத்துக்குடி வந்துவிட்டார் கனிமொழி. தூத்துக்குடி தொகுதி எம்.பி.,யான கனிமொழி, தனது தொகுதி மக்கள் வெள்ளத்தில் இருப்பது, பார்லி., கூட்டம், அரசியல் போராட்டம் அனைத்தையும் ஓரமாக வைத்து விட்டு அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி வேலை செய்வது அந்த தொகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் படையினருடன் படகில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசியது, அவர்களுக்கு தேவையானவற்றை செய்வது என அதிகாரிகள், அமைச்சர்களுடன் சேர்ந்து தானும் களத்திற்கு நேரடியாக சென்று கலக்கி வருகிறார் கனிமொழி. அது மட்டுமல்ல தான் செல்லும் இடங்களில் தற்போது என்ன நிலவரம், என்ன நடக்கிறது என்ற தகவல்களையும் போட்டோக்களையும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

வழக்கமாக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து விட்டு சென்று விடுவார்கள். அதற்கு பிறகு அதிகாரிகள் தான் மற்ற பணிகளை கவனித்துக் கொள்வார்கள். ஆனால் கனிமொழி மிக சாதாரணமாக களத்தில் இறங்கி பணியாற்றுவது கட்சி, அரசியல் தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. தூத்துக்குடி புஷ்பாநகர் பகுதியில் வீட்டில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கனிமொழி அனுப்பி வைத்தது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. நேரிலும், சமூக வலைதளங்களிலும் கனிமொழிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}