"அம்மாவின் வாசனை.. எதைப் போலும் இல்லாத புது மணம்".. பவதாரணி குரலில்.. கனிமொழி கவிதை..!

Jan 27, 2024,10:55 AM IST

சென்னை: திமுக எம்.பி கனிமொழி தான் எழுதிய அம்மாவின் வாசனை என்ற கவிதை குறித்த ஒரு உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்தக் கவிதையை மறைந்த பாடகி பவதாரணி தானே இசையமைத்து பாடியும் உள்ளார். இன்னும் வெளி வராத அந்தப் பாடலை பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிட்டுள்ளார் கனிமொழி.


இத்தனை அழகான, அருமையான குரல் நம்மை விட்டுப் பிரிந்து விட்டதே என்று , இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொருவரும் கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த அளவுக்கு அற்புதமாக அதில் பாடியுள்ளார் பவதாரணி.


இதுதான் கனிமொழி எழுதிய கவிதை




அம்மாவின் வாசனை

என் அம்மாவின் வாசனை


அது சந்தனம் இல்லை

ஜவ்வாதோ 

இப்போது அழகான புட்டிகளில் விற்கும் 

வாசனை திரவியமோ

எதைப் போலும் இல்லாத புது மணம்


அம்மாவின் வாசனை

என் அம்மாவின் வாசனை


சின்ன வயதில் 

அவளைக் கட்டிக்கொண்டு தூங்கிய போது

மெல்லியதாய் வந்து மூக்கை தழுவும்

அவள் அவிழ்த்துப் போட்ட சேலையை 

சுற்றிக் கொண்டு திரிந்த போது

அவளின் வாசனையை பூசிக்கொண்டதாய் தோன்றும்

முதல் மழையின் மண்வாடை போல் மூச்சு முட்ட

எடுத்து வைத்துக்கொள்ள தூண்டும்


அம்மாவின் வாசனை

என் அம்மாவின் வாசனை


எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு

மருந்தாய் மருந்தாய்

அவள் மடியில் தலை வைத்து

தூங்கிய போதெல்லாம்

பாதுகாப்பாய் எனை தாங்கிய மணம்

அவள் என்பதே அதுவும் சேர்ந்துதான்


வளர்ந்துவிட்ட மனதின் சுவர்கள்

அவளைக் கட்டிக்கொள்ள விடாத போதும்

ஆஹா ஹா ஹ மெத்தென்ற இதழாய் வருடிப்போகும்

தேவைகளின் தடம் பிடித்து தூரம் வந்துவிட்ட போதும்

எனக்கு மட்டுமே புரியும் அவளின் கருவறை மணத்தை

அள்ளி அள்ளி என் வீடெங்கும் தெளித்து

சுருண்டு படுத்து தூங்கிப்போக வேண்டும்


அம்மாவின் வாசனை

என் அம்மாவின் வாசனை


இது பவதாரணியின் குரலில் கனிமொழி எழுதிய கவிதை பாடல் வடிவில்..


https://twitter.com/KanimozhiDMK/status/1750744211396387197

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்